FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, May 12, 2015

செவித்திறன் குறைபாடு குழந்தைக்கு சிறப்பு முகாம்

12.05.2015, தர்மபுரி: 
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment