FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, May 12, 2015

செவித்திறன் குறைபாடு குழந்தைக்கு சிறப்பு முகாம்

12.05.2015, தர்மபுரி: 
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment