FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, May 12, 2015

செவித்திறன் குறைபாடு குழந்தைக்கு சிறப்பு முகாம்

12.05.2015, தர்மபுரி: 
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment