FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, May 12, 2015

செவித்திறன் குறைபாடு குழந்தைக்கு சிறப்பு முகாம்

12.05.2015, தர்மபுரி: 
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment