FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, May 26, 2015

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்


சென்னை, 26 May 2015
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் 1241 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 26-இல் எழுத்து தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளன. இதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், குரூப் 2 விண்ணப்பித்ததற்கான சான்று, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றுடன் சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் மே 29-க்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment