FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, April 14, 2016

ரூ.4,000-க்கு காது கேளாதோருக்கான கருவி: அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் சாதனை

14.04.2016, அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுவன் குறைந்த விலையில் காது கேளாதோருக்கான கருவியை தயாரித்து சாதனை படைத்துள்ளான். அதன் விலை சுமார் ரூ.4,000 ஆகும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் வெங்கடகிருஷ்ணன் அமெரிக்காவின் கென்டுகி மாகாணத்தின் லூசிவில்லி சிட்டியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி உள்ளார்.

பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து முகுந்த் கூறும் போது, “காது கேளாதோருக்கான கருவியின் விலை சுமார் ரூ.99,750 ஆக இருக்கிறது. ஆனால் நான் தயாரித்துள்ள கருவியை ரூ.4,000-க்கு தயாரிக்க முடியும். இதில் காது கேளாதோரின் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்” என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, பாட்டி வசிக்கும் பெங்களூருவுக்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது தனது தாத்தாவுக்கு காது கேளாத பிரச்சினை காரணமாக மருத்து வரை அணுகி கருவியை பொருத்தி உள்ளனர்.

இதற்காக சுமார் ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே குறைந்த விலை யில் இந்தக் கருவியை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் முகுந்துக்கு வந்துள்ளது.

வரும் கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு செல்ல இருப்ப தாகவும், தனது தாத்தாவுக்கு தான் கண்டுபிடித்த கருவியை வழங்க இருப்பதாகவும் முகுந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment