FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, April 14, 2016

ரூ.4,000-க்கு காது கேளாதோருக்கான கருவி: அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் சாதனை

14.04.2016, அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுவன் குறைந்த விலையில் காது கேளாதோருக்கான கருவியை தயாரித்து சாதனை படைத்துள்ளான். அதன் விலை சுமார் ரூ.4,000 ஆகும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் வெங்கடகிருஷ்ணன் அமெரிக்காவின் கென்டுகி மாகாணத்தின் லூசிவில்லி சிட்டியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி உள்ளார்.

பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து முகுந்த் கூறும் போது, “காது கேளாதோருக்கான கருவியின் விலை சுமார் ரூ.99,750 ஆக இருக்கிறது. ஆனால் நான் தயாரித்துள்ள கருவியை ரூ.4,000-க்கு தயாரிக்க முடியும். இதில் காது கேளாதோரின் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்” என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, பாட்டி வசிக்கும் பெங்களூருவுக்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது தனது தாத்தாவுக்கு காது கேளாத பிரச்சினை காரணமாக மருத்து வரை அணுகி கருவியை பொருத்தி உள்ளனர்.

இதற்காக சுமார் ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே குறைந்த விலை யில் இந்தக் கருவியை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் முகுந்துக்கு வந்துள்ளது.

வரும் கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு செல்ல இருப்ப தாகவும், தனது தாத்தாவுக்கு தான் கண்டுபிடித்த கருவியை வழங்க இருப்பதாகவும் முகுந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment