FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, April 14, 2016

ரூ.4,000-க்கு காது கேளாதோருக்கான கருவி: அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் சாதனை

14.04.2016, அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுவன் குறைந்த விலையில் காது கேளாதோருக்கான கருவியை தயாரித்து சாதனை படைத்துள்ளான். அதன் விலை சுமார் ரூ.4,000 ஆகும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் வெங்கடகிருஷ்ணன் அமெரிக்காவின் கென்டுகி மாகாணத்தின் லூசிவில்லி சிட்டியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி உள்ளார்.

பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து முகுந்த் கூறும் போது, “காது கேளாதோருக்கான கருவியின் விலை சுமார் ரூ.99,750 ஆக இருக்கிறது. ஆனால் நான் தயாரித்துள்ள கருவியை ரூ.4,000-க்கு தயாரிக்க முடியும். இதில் காது கேளாதோரின் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்” என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, பாட்டி வசிக்கும் பெங்களூருவுக்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது தனது தாத்தாவுக்கு காது கேளாத பிரச்சினை காரணமாக மருத்து வரை அணுகி கருவியை பொருத்தி உள்ளனர்.

இதற்காக சுமார் ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே குறைந்த விலை யில் இந்தக் கருவியை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் முகுந்துக்கு வந்துள்ளது.

வரும் கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு செல்ல இருப்ப தாகவும், தனது தாத்தாவுக்கு தான் கண்டுபிடித்த கருவியை வழங்க இருப்பதாகவும் முகுந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment