FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 14, 2016

ரூ.4,000-க்கு காது கேளாதோருக்கான கருவி: அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் சாதனை

14.04.2016, அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுவன் குறைந்த விலையில் காது கேளாதோருக்கான கருவியை தயாரித்து சாதனை படைத்துள்ளான். அதன் விலை சுமார் ரூ.4,000 ஆகும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் வெங்கடகிருஷ்ணன் அமெரிக்காவின் கென்டுகி மாகாணத்தின் லூசிவில்லி சிட்டியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி உள்ளார்.

பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து முகுந்த் கூறும் போது, “காது கேளாதோருக்கான கருவியின் விலை சுமார் ரூ.99,750 ஆக இருக்கிறது. ஆனால் நான் தயாரித்துள்ள கருவியை ரூ.4,000-க்கு தயாரிக்க முடியும். இதில் காது கேளாதோரின் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்” என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, பாட்டி வசிக்கும் பெங்களூருவுக்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது தனது தாத்தாவுக்கு காது கேளாத பிரச்சினை காரணமாக மருத்து வரை அணுகி கருவியை பொருத்தி உள்ளனர்.

இதற்காக சுமார் ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே குறைந்த விலை யில் இந்தக் கருவியை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் முகுந்துக்கு வந்துள்ளது.

வரும் கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு செல்ல இருப்ப தாகவும், தனது தாத்தாவுக்கு தான் கண்டுபிடித்த கருவியை வழங்க இருப்பதாகவும் முகுந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment