FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, April 19, 2016

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எத்தனை பேர்?- விவரம் இல்லை என்கிறது தேர்தல் துறை

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில், எந்தெந்த தொகுதியில் எத்தனை மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம்கூட தேர்தல் துறை அதிகாரிகளிடம் இல்லை என்று மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை சர்வமத வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவரான மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 75 வாக்காளர்களும், 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2014 லோக்சபா தேர்தலை விட இந்த முறை 41 லட்சத்து 62 ஆயிரத்து 393 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டு, வாக்களிக்க உள்ளனர். ஆனால் இந்த வாக்காளர்களில் எவ்வளவு பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என்கிற விவரம் அதிகாரிகளிடம் இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்தளப் பாதை, சக்கர நாற்காலி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும் வாக்களிக்க வைப்பது ஜனநாயகக் கடமை. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்துதர வேண்டும் என கடந்த 2.4.14-ல் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சாய்தளப் பாதை அமைக்கப்பட வில்லை. இதையடுத்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். அப்போது இனிவரும் நாட்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

வரும் மே 16-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், “உங்கள் தொகுதியில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்பதை நீங்களே கணக்கெடுத்துச் சொல்லுங்கள்” என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள், சங்கங் களிடம் கூறி வருகின்றனர். இது பழியை எங்கள் மீதே போட்டு நீதிமன்ற உத்தரவை தட்டிக் கழிப்பதற்கு சமம்.

ஒரு தொகுதியில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களுக்கென தனி வாக்குச்சாவடி அமைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிரந்தர சாய்தளப் பாதை, போதுமான சக்கர நாற்காலி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துதர வேண்டும். 2014 தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் அதிகாரிகள் மெத் தனப்போக்குடன் செயல்பட்டால், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment