FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, April 19, 2016

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எத்தனை பேர்?- விவரம் இல்லை என்கிறது தேர்தல் துறை

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில், எந்தெந்த தொகுதியில் எத்தனை மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம்கூட தேர்தல் துறை அதிகாரிகளிடம் இல்லை என்று மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை சர்வமத வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவரான மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 75 வாக்காளர்களும், 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2014 லோக்சபா தேர்தலை விட இந்த முறை 41 லட்சத்து 62 ஆயிரத்து 393 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டு, வாக்களிக்க உள்ளனர். ஆனால் இந்த வாக்காளர்களில் எவ்வளவு பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என்கிற விவரம் அதிகாரிகளிடம் இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்தளப் பாதை, சக்கர நாற்காலி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும் வாக்களிக்க வைப்பது ஜனநாயகக் கடமை. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்துதர வேண்டும் என கடந்த 2.4.14-ல் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சாய்தளப் பாதை அமைக்கப்பட வில்லை. இதையடுத்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். அப்போது இனிவரும் நாட்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

வரும் மே 16-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், “உங்கள் தொகுதியில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்பதை நீங்களே கணக்கெடுத்துச் சொல்லுங்கள்” என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள், சங்கங் களிடம் கூறி வருகின்றனர். இது பழியை எங்கள் மீதே போட்டு நீதிமன்ற உத்தரவை தட்டிக் கழிப்பதற்கு சமம்.

ஒரு தொகுதியில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களுக்கென தனி வாக்குச்சாவடி அமைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிரந்தர சாய்தளப் பாதை, போதுமான சக்கர நாற்காலி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துதர வேண்டும். 2014 தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் அதிகாரிகள் மெத் தனப்போக்குடன் செயல்பட்டால், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment