FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 10, 2016

அரசியலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வேண்டி கோரிக்கை


09.04.2016
அரசியலில் மகளிருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துவகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பின் 16வது மாநில மாநாடு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment