FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, April 10, 2016

அரசியலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வேண்டி கோரிக்கை


09.04.2016
அரசியலில் மகளிருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துவகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பின் 16வது மாநில மாநாடு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment