FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, April 14, 2016

எங்களுக்கும் ஓட்டளிக்க வாய்ப்பா? காது கேளாதோர் நெகிழ்ச்சி

திருப்பூர்: "இதுநாள் வரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது' என, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்ட அளவில், காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், 320 பேர் உள்ளனர். தேர்தல் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பது குறைவாக இருந்தது. இத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, நேற்று தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காதுகேளாதவர் விளையாட்டு குழு செய்தி தொடர்பாளர் சித்ரா பயிற்சி அளித்தார். தொடர்ந்து, கலெக்டர், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், "சைகை' முறையில், உறுதிமொழி ஏற்றனர்.

"தேர்தல் நடவடிக்கை குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்தாததால், நாங்கள் ஓட்டளிக்கவில்லை. இம்முறை, பட்டியலில் பெயர் சேர்த்திருக்கிறோம். இத்தேர்தலில், முதன் முறையாக பலரும் ஓட்டளிக்க உள்ளோம். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

பேனரில் இல்லையே?

தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு பேனரில், உடல் ஊனமுற்றவர், பார்வையற்றவர், முதியோர் படம் மட்டும் இருந்தது. மேடையின் பின்புறம் இருந்த அந்த பேனரை சுட்டிக்காட்டிய, காதுகேளாதவர் ஒருவர், "அந்த பேனரில் கூட நாங்கள் இல்லையே?' என்று "சைகை' மூலம் வருத்தத்துடன் கேட்டார்.

கலெக்டர் ஜெயந்தி, ""காதுகேளாதவர்கள், சராசரி மனிதராகவே தெரிகிறீர்கள்; அதனால், உங்களை அதில் சேர்க்கவில்லை. உங்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், உங்களை போன்ற ஒருவரையும் பேனரில் சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார். அதை புரிந்துகொண்ட காதுகேளாதவர்கள், கரவொலி எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment