FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 14, 2016

எங்களுக்கும் ஓட்டளிக்க வாய்ப்பா? காது கேளாதோர் நெகிழ்ச்சி

திருப்பூர்: "இதுநாள் வரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது' என, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்ட அளவில், காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், 320 பேர் உள்ளனர். தேர்தல் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பது குறைவாக இருந்தது. இத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, நேற்று தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காதுகேளாதவர் விளையாட்டு குழு செய்தி தொடர்பாளர் சித்ரா பயிற்சி அளித்தார். தொடர்ந்து, கலெக்டர், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், "சைகை' முறையில், உறுதிமொழி ஏற்றனர்.

"தேர்தல் நடவடிக்கை குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்தாததால், நாங்கள் ஓட்டளிக்கவில்லை. இம்முறை, பட்டியலில் பெயர் சேர்த்திருக்கிறோம். இத்தேர்தலில், முதன் முறையாக பலரும் ஓட்டளிக்க உள்ளோம். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

பேனரில் இல்லையே?

தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு பேனரில், உடல் ஊனமுற்றவர், பார்வையற்றவர், முதியோர் படம் மட்டும் இருந்தது. மேடையின் பின்புறம் இருந்த அந்த பேனரை சுட்டிக்காட்டிய, காதுகேளாதவர் ஒருவர், "அந்த பேனரில் கூட நாங்கள் இல்லையே?' என்று "சைகை' மூலம் வருத்தத்துடன் கேட்டார்.

கலெக்டர் ஜெயந்தி, ""காதுகேளாதவர்கள், சராசரி மனிதராகவே தெரிகிறீர்கள்; அதனால், உங்களை அதில் சேர்க்கவில்லை. உங்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், உங்களை போன்ற ஒருவரையும் பேனரில் சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார். அதை புரிந்துகொண்ட காதுகேளாதவர்கள், கரவொலி எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment