FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, April 14, 2016

எங்களுக்கும் ஓட்டளிக்க வாய்ப்பா? காது கேளாதோர் நெகிழ்ச்சி

திருப்பூர்: "இதுநாள் வரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது' என, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்ட அளவில், காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், 320 பேர் உள்ளனர். தேர்தல் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பது குறைவாக இருந்தது. இத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, நேற்று தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காதுகேளாதவர் விளையாட்டு குழு செய்தி தொடர்பாளர் சித்ரா பயிற்சி அளித்தார். தொடர்ந்து, கலெக்டர், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், "சைகை' முறையில், உறுதிமொழி ஏற்றனர்.

"தேர்தல் நடவடிக்கை குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்தாததால், நாங்கள் ஓட்டளிக்கவில்லை. இம்முறை, பட்டியலில் பெயர் சேர்த்திருக்கிறோம். இத்தேர்தலில், முதன் முறையாக பலரும் ஓட்டளிக்க உள்ளோம். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

பேனரில் இல்லையே?

தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு பேனரில், உடல் ஊனமுற்றவர், பார்வையற்றவர், முதியோர் படம் மட்டும் இருந்தது. மேடையின் பின்புறம் இருந்த அந்த பேனரை சுட்டிக்காட்டிய, காதுகேளாதவர் ஒருவர், "அந்த பேனரில் கூட நாங்கள் இல்லையே?' என்று "சைகை' மூலம் வருத்தத்துடன் கேட்டார்.

கலெக்டர் ஜெயந்தி, ""காதுகேளாதவர்கள், சராசரி மனிதராகவே தெரிகிறீர்கள்; அதனால், உங்களை அதில் சேர்க்கவில்லை. உங்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், உங்களை போன்ற ஒருவரையும் பேனரில் சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார். அதை புரிந்துகொண்ட காதுகேளாதவர்கள், கரவொலி எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment