FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, April 14, 2016

எங்களுக்கும் ஓட்டளிக்க வாய்ப்பா? காது கேளாதோர் நெகிழ்ச்சி

திருப்பூர்: "இதுநாள் வரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது' என, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்ட அளவில், காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், 320 பேர் உள்ளனர். தேர்தல் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பது குறைவாக இருந்தது. இத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, நேற்று தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காதுகேளாதவர் விளையாட்டு குழு செய்தி தொடர்பாளர் சித்ரா பயிற்சி அளித்தார். தொடர்ந்து, கலெக்டர், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், "சைகை' முறையில், உறுதிமொழி ஏற்றனர்.

"தேர்தல் நடவடிக்கை குறித்து எங்களுக்கு தெளிவுபடுத்தாததால், நாங்கள் ஓட்டளிக்கவில்லை. இம்முறை, பட்டியலில் பெயர் சேர்த்திருக்கிறோம். இத்தேர்தலில், முதன் முறையாக பலரும் ஓட்டளிக்க உள்ளோம். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த எங்களையும், ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

பேனரில் இல்லையே?

தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு பேனரில், உடல் ஊனமுற்றவர், பார்வையற்றவர், முதியோர் படம் மட்டும் இருந்தது. மேடையின் பின்புறம் இருந்த அந்த பேனரை சுட்டிக்காட்டிய, காதுகேளாதவர் ஒருவர், "அந்த பேனரில் கூட நாங்கள் இல்லையே?' என்று "சைகை' மூலம் வருத்தத்துடன் கேட்டார்.

கலெக்டர் ஜெயந்தி, ""காதுகேளாதவர்கள், சராசரி மனிதராகவே தெரிகிறீர்கள்; அதனால், உங்களை அதில் சேர்க்கவில்லை. உங்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், உங்களை போன்ற ஒருவரையும் பேனரில் சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார். அதை புரிந்துகொண்ட காதுகேளாதவர்கள், கரவொலி எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment