FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, April 14, 2016

வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

14.04.2016, அரியலூர்,
வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 59). கூலித்தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயதுடைய வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிச்சைபிள்ளைக்கும், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே நட்பின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19–9–2015 அன்று அந்த மாற்றுத்திறனாளி பெண் தனது வீட்டில் தனியாக இருந்த போது அங்கு பிச்சைபிள்ளை வந்தார். பின்னர் பிச்சைபிள்ளை அந்த பெண்ணிடம், தாகம் எடுப்பதாக கூறி தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்த பெண் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டினுள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பிச்சைபிள்ளை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் கதறினார். சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து பிச்சைபிள்ளையை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைபிள்ளையை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரியலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிச்சைபிள்ளைக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். அதனை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து பிச்சைபிள்ளையை வெளியே அழைத்து வந்த குவாகம் போலீசார் போலீஸ் வேனில் கொண்டு சென்று அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment