FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, April 14, 2016

வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

14.04.2016, அரியலூர்,
வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 59). கூலித்தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயதுடைய வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிச்சைபிள்ளைக்கும், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே நட்பின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19–9–2015 அன்று அந்த மாற்றுத்திறனாளி பெண் தனது வீட்டில் தனியாக இருந்த போது அங்கு பிச்சைபிள்ளை வந்தார். பின்னர் பிச்சைபிள்ளை அந்த பெண்ணிடம், தாகம் எடுப்பதாக கூறி தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்த பெண் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டினுள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பிச்சைபிள்ளை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் கதறினார். சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து பிச்சைபிள்ளையை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைபிள்ளையை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரியலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிச்சைபிள்ளைக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். அதனை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து பிச்சைபிள்ளையை வெளியே அழைத்து வந்த குவாகம் போலீசார் போலீஸ் வேனில் கொண்டு சென்று அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment