FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, April 14, 2016

வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

14.04.2016, அரியலூர்,
வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 59). கூலித்தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயதுடைய வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிச்சைபிள்ளைக்கும், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே நட்பின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19–9–2015 அன்று அந்த மாற்றுத்திறனாளி பெண் தனது வீட்டில் தனியாக இருந்த போது அங்கு பிச்சைபிள்ளை வந்தார். பின்னர் பிச்சைபிள்ளை அந்த பெண்ணிடம், தாகம் எடுப்பதாக கூறி தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்த பெண் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டினுள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பிச்சைபிள்ளை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் கதறினார். சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து பிச்சைபிள்ளையை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைபிள்ளையை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரியலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிச்சைபிள்ளைக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். அதனை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து பிச்சைபிள்ளையை வெளியே அழைத்து வந்த குவாகம் போலீசார் போலீஸ் வேனில் கொண்டு சென்று அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment