FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, April 14, 2016

வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

14.04.2016, அரியலூர்,
வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 59). கூலித்தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயதுடைய வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிச்சைபிள்ளைக்கும், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே நட்பின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19–9–2015 அன்று அந்த மாற்றுத்திறனாளி பெண் தனது வீட்டில் தனியாக இருந்த போது அங்கு பிச்சைபிள்ளை வந்தார். பின்னர் பிச்சைபிள்ளை அந்த பெண்ணிடம், தாகம் எடுப்பதாக கூறி தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்த பெண் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டினுள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பிச்சைபிள்ளை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் கதறினார். சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து பிச்சைபிள்ளையை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைபிள்ளையை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரியலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிச்சைபிள்ளைக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். அதனை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து பிச்சைபிள்ளையை வெளியே அழைத்து வந்த குவாகம் போலீசார் போலீஸ் வேனில் கொண்டு சென்று அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment