FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, April 20, 2016

சேலம் அருகே Deaf மாற்றுத்திறனாளியின் மனைவி மர்மச்சாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

20.04.2016 சேலம் : சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வீராணம் அடுத்த தைலானூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பழனியம்மாளுக்கும், அருணாசலத்தின் அண்ணன் சுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் சுப்ரமணியுடன் இருந்த தொடர்பை பழனியம்மாள் நிறுத்தி கொண்டார். இதுதொடர்பாக, சுப்ரமணிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பழனியம்மாள் வீட்டில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பழனியம்மாளை, சுப்ரமணி, அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், கொண்டலாம்பட்டி போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், சரவணன் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment