FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, April 20, 2016

சேலம் அருகே Deaf மாற்றுத்திறனாளியின் மனைவி மர்மச்சாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

20.04.2016 சேலம் : சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வீராணம் அடுத்த தைலானூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பழனியம்மாளுக்கும், அருணாசலத்தின் அண்ணன் சுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் சுப்ரமணியுடன் இருந்த தொடர்பை பழனியம்மாள் நிறுத்தி கொண்டார். இதுதொடர்பாக, சுப்ரமணிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பழனியம்மாள் வீட்டில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பழனியம்மாளை, சுப்ரமணி, அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், கொண்டலாம்பட்டி போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், சரவணன் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment