FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, April 20, 2016

சேலம் அருகே Deaf மாற்றுத்திறனாளியின் மனைவி மர்மச்சாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

20.04.2016 சேலம் : சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வீராணம் அடுத்த தைலானூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பழனியம்மாளுக்கும், அருணாசலத்தின் அண்ணன் சுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் சுப்ரமணியுடன் இருந்த தொடர்பை பழனியம்மாள் நிறுத்தி கொண்டார். இதுதொடர்பாக, சுப்ரமணிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பழனியம்மாள் வீட்டில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பழனியம்மாளை, சுப்ரமணி, அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், கொண்டலாம்பட்டி போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், சரவணன் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment