FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, April 20, 2016

சேலம் அருகே Deaf மாற்றுத்திறனாளியின் மனைவி மர்மச்சாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

20.04.2016 சேலம் : சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வீராணம் அடுத்த தைலானூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பழனியம்மாளுக்கும், அருணாசலத்தின் அண்ணன் சுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் சுப்ரமணியுடன் இருந்த தொடர்பை பழனியம்மாள் நிறுத்தி கொண்டார். இதுதொடர்பாக, சுப்ரமணிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பழனியம்மாள் வீட்டில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பழனியம்மாளை, சுப்ரமணி, அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், கொண்டலாம்பட்டி போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், சரவணன் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment