FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, April 3, 2016

DEAF பெண் பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு ஆயுள் சிறை

01.04.2016,  மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஸ்ரீரங்கன் (50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.

இதனால், அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 4 மாதங்களில் இறந்துவிட்டது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஸ்ரீரங்கனிடம் அப்பெண் கேட்டு வந்தாராம். ஆனால், ஸ்ரீரங்கன் திருமணத்துக்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஸ்ரீரங்கனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment