FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, April 3, 2016

DEAF பெண் பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு ஆயுள் சிறை

01.04.2016,  மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஸ்ரீரங்கன் (50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.

இதனால், அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 4 மாதங்களில் இறந்துவிட்டது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஸ்ரீரங்கனிடம் அப்பெண் கேட்டு வந்தாராம். ஆனால், ஸ்ரீரங்கன் திருமணத்துக்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஸ்ரீரங்கனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment