FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, April 3, 2016

DEAF பெண் பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு ஆயுள் சிறை

01.04.2016,  மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஸ்ரீரங்கன் (50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.

இதனால், அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 4 மாதங்களில் இறந்துவிட்டது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஸ்ரீரங்கனிடம் அப்பெண் கேட்டு வந்தாராம். ஆனால், ஸ்ரீரங்கன் திருமணத்துக்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஸ்ரீரங்கனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment