FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, April 3, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி தொழில்திறன் பயிற்சி B


01.04.2016, சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி தொழில் திறன் பயிற்சியின் தொடக்க விழாவை வியாழக்கிழமை நடத்தின.

கிரீடு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பையன் வரவேற்றார். தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார்.

அவர் பேசியது: கிரீடு தொண்டு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.


சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் (சஐஉடஙஈ) சார்பில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச கணினி தொழில் திறன் பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றார்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment