FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, April 3, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி தொழில்திறன் பயிற்சி B


01.04.2016, சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி தொழில் திறன் பயிற்சியின் தொடக்க விழாவை வியாழக்கிழமை நடத்தின.

கிரீடு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பையன் வரவேற்றார். தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார்.

அவர் பேசியது: கிரீடு தொண்டு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.


சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் (சஐஉடஙஈ) சார்பில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச கணினி தொழில் திறன் பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றார்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment