FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 3, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி தொழில்திறன் பயிற்சி B


01.04.2016, சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி தொழில் திறன் பயிற்சியின் தொடக்க விழாவை வியாழக்கிழமை நடத்தின.

கிரீடு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பையன் வரவேற்றார். தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார்.

அவர் பேசியது: கிரீடு தொண்டு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.


சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் (சஐஉடஙஈ) சார்பில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச கணினி தொழில் திறன் பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றார்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment