FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 4, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கான செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனமும், ஜேஎல்ஆர் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவன நிர்வாகி ஜெபமணி தலைமை வகித்தார். சுப்பையா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா முகாமைத் தொடங்கிவைத்தார். இந்த முகாமில், 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.


No comments:

Post a Comment