FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, April 3, 2016

திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் பலி

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் தேங்காய் பறிக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் இன்று இரவு உயிரிழந்தனர்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியார் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் ஒன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தங்க வைத்து, தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ராமநாதபுரம் வைரவன்கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் பாரதிராஜா (20), இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் வெயில்ராஜ் (22) ஆகிய இருவரும் தொழிற்பயிற்சி பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இந்நிலையில் பயிற்சி முடிந்து இன்று இரவு ஓய்வாக இருந்த இவர்கள், அங்கிருந்த இரும்பு கம்பியை (தெரட்டி) எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றனராம். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி தென்னை மரத்திற்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியின் மீது பட்டதாகவும், அதிலிருந்த மின்சாரம் பாரதிராஜாவைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அவரைக் காப்பாற்றச் சென்ற வெயில்ராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்டநேரம் இவர்கள் இருவரையும் காணாத தொழிற்பயிற்சி காவலாளிகள், இருவரையும் தேடி வந்து பார்த்த போது, இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்துக்கு தகவல் அளி்த்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment