FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, April 3, 2016

திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் பலி

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் தேங்காய் பறிக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் இன்று இரவு உயிரிழந்தனர்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியார் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் ஒன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தங்க வைத்து, தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ராமநாதபுரம் வைரவன்கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் பாரதிராஜா (20), இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் வெயில்ராஜ் (22) ஆகிய இருவரும் தொழிற்பயிற்சி பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இந்நிலையில் பயிற்சி முடிந்து இன்று இரவு ஓய்வாக இருந்த இவர்கள், அங்கிருந்த இரும்பு கம்பியை (தெரட்டி) எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றனராம். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி தென்னை மரத்திற்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியின் மீது பட்டதாகவும், அதிலிருந்த மின்சாரம் பாரதிராஜாவைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அவரைக் காப்பாற்றச் சென்ற வெயில்ராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்டநேரம் இவர்கள் இருவரையும் காணாத தொழிற்பயிற்சி காவலாளிகள், இருவரையும் தேடி வந்து பார்த்த போது, இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்துக்கு தகவல் அளி்த்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment