FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, April 3, 2016

திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் பலி

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் தேங்காய் பறிக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் இன்று இரவு உயிரிழந்தனர்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியார் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் ஒன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தங்க வைத்து, தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ராமநாதபுரம் வைரவன்கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் பாரதிராஜா (20), இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் வெயில்ராஜ் (22) ஆகிய இருவரும் தொழிற்பயிற்சி பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இந்நிலையில் பயிற்சி முடிந்து இன்று இரவு ஓய்வாக இருந்த இவர்கள், அங்கிருந்த இரும்பு கம்பியை (தெரட்டி) எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றனராம். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி தென்னை மரத்திற்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியின் மீது பட்டதாகவும், அதிலிருந்த மின்சாரம் பாரதிராஜாவைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அவரைக் காப்பாற்றச் சென்ற வெயில்ராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்டநேரம் இவர்கள் இருவரையும் காணாத தொழிற்பயிற்சி காவலாளிகள், இருவரையும் தேடி வந்து பார்த்த போது, இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்துக்கு தகவல் அளி்த்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment