FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள்

2.03.2015 
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னைக் சாலிகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் அவர்கள், தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் பிறருக்கு இணையாக விளங்க முடியும்.

மாற்றுத் திறனாளிகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களது திறமையை ஊக்குவிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

முன்னதாக சமூகம், கலை உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உதவிக்கரம் அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி. வரதக்குட்டி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மரியஜீனா ஜான்சன், மாற்றுத் திறன் இசைக் கலைஞர் தான்சன், அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment