FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள்

2.03.2015 
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னைக் சாலிகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் அவர்கள், தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் பிறருக்கு இணையாக விளங்க முடியும்.

மாற்றுத் திறனாளிகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களது திறமையை ஊக்குவிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

முன்னதாக சமூகம், கலை உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உதவிக்கரம் அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி. வரதக்குட்டி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மரியஜீனா ஜான்சன், மாற்றுத் திறன் இசைக் கலைஞர் தான்சன், அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment