FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள்

2.03.2015 
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னைக் சாலிகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் அவர்கள், தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் பிறருக்கு இணையாக விளங்க முடியும்.

மாற்றுத் திறனாளிகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களது திறமையை ஊக்குவிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

முன்னதாக சமூகம், கலை உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உதவிக்கரம் அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி. வரதக்குட்டி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மரியஜீனா ஜான்சன், மாற்றுத் திறன் இசைக் கலைஞர் தான்சன், அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment