FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, March 14, 2015

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக மறியல்! பார்வையற்ற மாணவர்கள் கைது!


பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக சென்னை கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

வேலை வாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் கடந்த 6 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பார்வையற்ற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை அவர்கள் கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment