FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, March 14, 2015

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக மறியல்! பார்வையற்ற மாணவர்கள் கைது!


பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக சென்னை கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

வேலை வாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் கடந்த 6 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பார்வையற்ற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை அவர்கள் கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment