FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, March 14, 2015

மாற்றுத் திறனாளிகள் வங்கிக்கடன் பெற விதிமுறைகள் எளிமையாக்கம்

13.03.2015
வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் கடன் பெறுவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமையாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாற்றுத் திறனாளிகளை நலிவுற்ற பிரிவினர் என்ற பிரிவில் சேர்த்து முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நலிந்த பிரிவினர் என்ற பிரிவில் இப்போது சிறு விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்கிகளின் கடன் அளிப்பில் 10 சதவிகிதத்தை நலிந்த பிரிவினருக்கு வழங்க விதிமுறை உள்ளது. அதே பிரிவில் மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்க ரிசர்வ் வங்கி இப்போது உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment