FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 19, 2015

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்

19.03.2015
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய தொடர் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்க வேண்டுமென பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 10-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தில்... தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக அரசின் சார்பில் சமூகநலம்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகளில் 4 அம்ச கோரிக்கைகளை அரசுத் தரப்பில் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

தனியார் கல்லூரி, பள்ளிகளில் வேலைக்கு உத்தரவாதம், வேலையில்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னையிலும், திருச்சியிலும் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் போராட்டம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அனைத்து மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடனும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தங்களின் போராட்டம் தொடர்வதாக ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment