FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, March 28, 2015

வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை


21.03.2015
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் காரமடை திருமலை வீதியை சேர்ந்த வணங்காமுடி (வயது-57) என்பவர் சமையலர் மற்றும் வார்டனாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து, வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-10-2013,அன்று கோவை மக்கள் நல சேவை சங்கம் சார்பில் அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, அந்த சங்கத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி சைகை மூலம் தெரிவித்தார். உடனே அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காரமடை போலீசார் கடந்த 7-10-2013,அன்று அந்த காப்பக வார்டன் மற்றும் சமையலரான வணங்காமுடி மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வணங்காமுடியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார். மேலும், சம்பவம் நடந்த காப்பகத்துக்கு மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரும் நேரில் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமியால் பேசவோ, கேட்கவோ முடியாது என்பதால், திருப்பூர் கோதம்பாளையம் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் சைகை மூலம் அந்த சிறுமியிடம் பேசி, அவர் சொன்னதை நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட வணங்காமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காது கேட்காத, வாய் பேசமுடியாத அந்த சிறுமிக்கு 15 வயது ஆனாலும், மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவர் 6 வயது மதிக்கத்தக்கவர் என்றே எடுத்துக்கொள்ளப்படுவார்.

எனவே அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பின் நகலை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற வணங்காமுடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment