FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, March 28, 2015

வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை


21.03.2015
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் காரமடை திருமலை வீதியை சேர்ந்த வணங்காமுடி (வயது-57) என்பவர் சமையலர் மற்றும் வார்டனாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து, வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-10-2013,அன்று கோவை மக்கள் நல சேவை சங்கம் சார்பில் அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, அந்த சங்கத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி சைகை மூலம் தெரிவித்தார். உடனே அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காரமடை போலீசார் கடந்த 7-10-2013,அன்று அந்த காப்பக வார்டன் மற்றும் சமையலரான வணங்காமுடி மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வணங்காமுடியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார். மேலும், சம்பவம் நடந்த காப்பகத்துக்கு மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரும் நேரில் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமியால் பேசவோ, கேட்கவோ முடியாது என்பதால், திருப்பூர் கோதம்பாளையம் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் சைகை மூலம் அந்த சிறுமியிடம் பேசி, அவர் சொன்னதை நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட வணங்காமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காது கேட்காத, வாய் பேசமுடியாத அந்த சிறுமிக்கு 15 வயது ஆனாலும், மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவர் 6 வயது மதிக்கத்தக்கவர் என்றே எடுத்துக்கொள்ளப்படுவார்.

எனவே அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பின் நகலை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற வணங்காமுடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment