FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, March 28, 2015

வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை


21.03.2015
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் காரமடை திருமலை வீதியை சேர்ந்த வணங்காமுடி (வயது-57) என்பவர் சமையலர் மற்றும் வார்டனாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து, வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-10-2013,அன்று கோவை மக்கள் நல சேவை சங்கம் சார்பில் அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, அந்த சங்கத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி சைகை மூலம் தெரிவித்தார். உடனே அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காரமடை போலீசார் கடந்த 7-10-2013,அன்று அந்த காப்பக வார்டன் மற்றும் சமையலரான வணங்காமுடி மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வணங்காமுடியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார். மேலும், சம்பவம் நடந்த காப்பகத்துக்கு மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரும் நேரில் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமியால் பேசவோ, கேட்கவோ முடியாது என்பதால், திருப்பூர் கோதம்பாளையம் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் சைகை மூலம் அந்த சிறுமியிடம் பேசி, அவர் சொன்னதை நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட வணங்காமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காது கேட்காத, வாய் பேசமுடியாத அந்த சிறுமிக்கு 15 வயது ஆனாலும், மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவர் 6 வயது மதிக்கத்தக்கவர் என்றே எடுத்துக்கொள்ளப்படுவார்.

எனவே அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பின் நகலை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற வணங்காமுடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment