FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, March 30, 2015

பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் தகுதிக்கு இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 100 காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய வாணிப நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி:
ஜூனியர் அசிஸ்டென்ட் டிரெய்னி (நிலை - எஸ் - 3):

மொத்த இடங்கள்:
100 (எஸ்சி - 16, எஸ்டி - 6, ஒபிசி - 28, பொது - 50).

சம்பளம்:
ரூ.16,800 - 24,110.

வயது:
1.3.2015 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

தகுதி:55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு வருட டிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருந்தால் போதும்).

அதிகபட்ச வயது வரம்பு
1.3.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.250. இதை இன்டர்நெட் பேங்கிங் அக்கவுன்ட்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். ஸ்டேட் பாங்க் செலானை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2015.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை சரிபார்க்க, திருத்தம் செய்ய கடைசி நாள்:8.4.2015.

No comments:

Post a Comment