FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, March 30, 2015

பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் தகுதிக்கு இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 100 காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய வாணிப நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி:
ஜூனியர் அசிஸ்டென்ட் டிரெய்னி (நிலை - எஸ் - 3):

மொத்த இடங்கள்:
100 (எஸ்சி - 16, எஸ்டி - 6, ஒபிசி - 28, பொது - 50).

சம்பளம்:
ரூ.16,800 - 24,110.

வயது:
1.3.2015 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

தகுதி:55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு வருட டிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருந்தால் போதும்).

அதிகபட்ச வயது வரம்பு
1.3.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.250. இதை இன்டர்நெட் பேங்கிங் அக்கவுன்ட்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். ஸ்டேட் பாங்க் செலானை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2015.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை சரிபார்க்க, திருத்தம் செய்ய கடைசி நாள்:8.4.2015.

No comments:

Post a Comment