FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, March 30, 2015

பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் தகுதிக்கு இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 100 காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய வாணிப நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி:
ஜூனியர் அசிஸ்டென்ட் டிரெய்னி (நிலை - எஸ் - 3):

மொத்த இடங்கள்:
100 (எஸ்சி - 16, எஸ்டி - 6, ஒபிசி - 28, பொது - 50).

சம்பளம்:
ரூ.16,800 - 24,110.

வயது:
1.3.2015 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

தகுதி:55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு வருட டிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருந்தால் போதும்).

அதிகபட்ச வயது வரம்பு
1.3.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.250. இதை இன்டர்நெட் பேங்கிங் அக்கவுன்ட்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். ஸ்டேட் பாங்க் செலானை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2015.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை சரிபார்க்க, திருத்தம் செய்ய கடைசி நாள்:8.4.2015.

No comments:

Post a Comment