FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, March 25, 2015

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

சென்னை,25 March 2015
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இல்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பை அரசு அமலாக்கவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு அரசின் அடையாளச் சான்றிதழ் வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாளச் சான்றிதழைப் பெறவே அவர்கள் போராட வேண்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு, அடையாளச் சான்றிதழ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment