FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 13, 2015

Huge "Sit in Dharna until Issues settled" கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் - மாற்றுதிறனாளி சங்கம் அறிவிப்பு


கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் - மாற்றுதிறனாளி சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க ஊனத்தின் சதவிகிதம் 60க்கும் மேல் இருக்க வேண்டும், 5000 ரூபாய்க்குமேல் குடும்ப சொத்து இருக்க கூடாது, குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்ககூடாது, அனாதையாக இருக்க வேண்டும் போன்ற பொருத்தமற்ற வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத விதிமுறைகளை தமிழக அரசு கடைபிடிக்கிறது. இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகளை மாநில அரசு கைவிட வேண்டும், உதவித்தொகையை மாதம் 3000 ஆக உயர்த்தி மாற்றுதிறனாளி

நலத்துறை மூலமே வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80 சத ஊனம் இருந்தால்தான் உதவித்தொகை வழங்கப்படுமென்ற பாரபட்சமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 காலை முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக 3000க்கும் மேற்பட்ட மாற்றுதிரனாளிகளை மாநிலம் முழுவதுமிருந்து திரட்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக இன்று சென்னையில் பதிரிகையாலர்கள சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, மற்றும் மாநில செயலாளர் எஸ். நம்புராஜன் தெரிவித்தனர்.

மேற்கண்ட பிரதான கோரிக்கையுடன், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அரசாணைப்படி அடையாள சான்ற வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசின் எல்லா துறைகளிலும் பின்னிடைவு காலி பணியிடங்கள கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பின்பற்றப்படும் முன்னுரிமை பட்டியலில் 2009 மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தபடி முதலிடத்திற்கு மாற்றி, தற்போது காத்திருக்கும் 1,10,000க்கும் மேற்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு பணிகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட வெவ்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தலைமை செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் ஆணையர்கள், எமது சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து தீர்க்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை வைதுள்ளக அவர்கள் தெரிவித்தனர்.
------------------

Huge "Sit in Dharna until Issues settled" 

The Tamilnadu Assn for the Rights of All Types of Differently Abled & Care Givers has announced to hold huge "Sit in Dharna until Issues settled" at the Chennai Chepauk arena on 24th March from 10am.


The main demands are as follows:
To repeal the stringent norms for giving monthly allowance for disabled such as completion of 18 years, family wealth should not be above 5000 rupees, the disability should be more than 60%, increase the allowance from 1000 to 3000 rupees and no male heir to be in the family.

Along with the above demand as per the existing order the disability certificate should be issued in the primary heath centres, as per the 2013 supreme court judgement the state should bring out to light the backlog vacancies from all the departments of the disabled as per the 3% legal right. In this regard, the govt should also submit a white paper in the state assembly.

And also the association demand is to set up a committee headed by the Chief Secretary to settle various pending issues concerning with various departments.


No comments:

Post a Comment