FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, March 4, 2015

பதிவு செய்யாத மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை: கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை

04.03.2015, கிருஷ்ணகிரி : 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பதிவு பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, அதில் பல தரப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மலை கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள், மேலும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவு, 52ன் கீழ், பதிவு செய்யாமல் இருந்தால், வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment