FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, March 4, 2015

பதிவு செய்யாத மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை: கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை

04.03.2015, கிருஷ்ணகிரி : 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பதிவு பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, அதில் பல தரப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மலை கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள், மேலும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவு, 52ன் கீழ், பதிவு செய்யாமல் இருந்தால், வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment