FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, March 4, 2015

பதிவு செய்யாத மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை: கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை

04.03.2015, கிருஷ்ணகிரி : 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பதிவு பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, அதில் பல தரப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மலை கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள், மேலும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவு, 52ன் கீழ், பதிவு செய்யாமல் இருந்தால், வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment