FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

No comments:

Post a Comment