FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

No comments:

Post a Comment