FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

No comments:

Post a Comment