FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

No comments:

Post a Comment