FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, July 18, 2015

வழுக்குமரம் ஏறி வாகைசூடிய DEAF மாற்றுத் திறனாளி இளைஞர்

16.07.2015, வடமதுரை:
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் மாற்று திறனாளி இளைஞர் 60 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி வாகை சூடினார்.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல் நடந்தன.

நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழுமரத்தில் (வழுக்கு மரம்) ஏறும் போட்டி நடந்தது. ஊர் மந்தையில் இருந்த 60 அடி உயர வழுக்கு மரம் நடப்பட்டு இருந்தது.

பாரம்பரியமாக ஏறும் இளைஞர் குழுவினர் ஒருசேர முயற்சித்தும், இறுதியில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி ராமர் மரத்தின் உச்சியை அடைந்து வாகை சூடினார். அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment