FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, July 18, 2015

வழுக்குமரம் ஏறி வாகைசூடிய DEAF மாற்றுத் திறனாளி இளைஞர்

16.07.2015, வடமதுரை:
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் மாற்று திறனாளி இளைஞர் 60 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி வாகை சூடினார்.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல் நடந்தன.

நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழுமரத்தில் (வழுக்கு மரம்) ஏறும் போட்டி நடந்தது. ஊர் மந்தையில் இருந்த 60 அடி உயர வழுக்கு மரம் நடப்பட்டு இருந்தது.

பாரம்பரியமாக ஏறும் இளைஞர் குழுவினர் ஒருசேர முயற்சித்தும், இறுதியில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி ராமர் மரத்தின் உச்சியை அடைந்து வாகை சூடினார். அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment