FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, July 18, 2015

வழுக்குமரம் ஏறி வாகைசூடிய DEAF மாற்றுத் திறனாளி இளைஞர்

16.07.2015, வடமதுரை:
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் மாற்று திறனாளி இளைஞர் 60 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி வாகை சூடினார்.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல் நடந்தன.

நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழுமரத்தில் (வழுக்கு மரம்) ஏறும் போட்டி நடந்தது. ஊர் மந்தையில் இருந்த 60 அடி உயர வழுக்கு மரம் நடப்பட்டு இருந்தது.

பாரம்பரியமாக ஏறும் இளைஞர் குழுவினர் ஒருசேர முயற்சித்தும், இறுதியில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி ராமர் மரத்தின் உச்சியை அடைந்து வாகை சூடினார். அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment