FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை

09.07.2015, சிவகங்கை:
""மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வழங்கப்படும்,'' என சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 என, அவர்களது வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்கவேண்டும். வருமான வரம்பு இல்லை. 10 ஆண்டு உதவி தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்தால், உடனே பூர்த்தி செய்து உதவி தொகையை பெற்று செல்லலாம், என்றார்.

No comments:

Post a Comment