FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை

09.07.2015, சிவகங்கை:
""மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வழங்கப்படும்,'' என சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 என, அவர்களது வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்கவேண்டும். வருமான வரம்பு இல்லை. 10 ஆண்டு உதவி தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்தால், உடனே பூர்த்தி செய்து உதவி தொகையை பெற்று செல்லலாம், என்றார்.

No comments:

Post a Comment