FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 24, 2015

ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் 53%

23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment