FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, July 24, 2015

ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் 53%

23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment