FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, July 24, 2015

ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் 53%

23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment