FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, July 2, 2015

மெட்ரோ ரயிலில் சலுகை விலை பயணச் சீட்டு: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

சென்னை, 02 July 2015
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலை பயணச் சீட்டு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து புதன்கிழமை அந்தச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் சலுகை கட்டணங்கள் உள்ளன. அதேபோல, மாநிலங்களுக்கு ஏற்றவாறு பேருந்து பயணங்களில் சலுகைகள் உள்ளன. தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்கும், பணிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட அளவில் இலவச பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
மாநிலத்தின் எந்த ஓர் இடத்திற்கும் 25 சதவீத கட்டணத்தில் பயணம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மெட்ரோ ரயிலில் அப்படிப்பட்ட எந்த சலுகையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, ரயில், பேருந்துகளில் உள்ளதுபோல மெட்ரோ ரயிலிலும் 4-இல் ஒரு பங்கு கட்டணத்தில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடைய துணையாளர் ஒருவரும் பயணம் செய்ய சலுகை அளித்திட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியான ஸ்மார்ட் கார்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment