FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, July 2, 2015

மெட்ரோ ரயிலில் சலுகை விலை பயணச் சீட்டு: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

சென்னை, 02 July 2015
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலை பயணச் சீட்டு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து புதன்கிழமை அந்தச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் சலுகை கட்டணங்கள் உள்ளன. அதேபோல, மாநிலங்களுக்கு ஏற்றவாறு பேருந்து பயணங்களில் சலுகைகள் உள்ளன. தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்கும், பணிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட அளவில் இலவச பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
மாநிலத்தின் எந்த ஓர் இடத்திற்கும் 25 சதவீத கட்டணத்தில் பயணம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மெட்ரோ ரயிலில் அப்படிப்பட்ட எந்த சலுகையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, ரயில், பேருந்துகளில் உள்ளதுபோல மெட்ரோ ரயிலிலும் 4-இல் ஒரு பங்கு கட்டணத்தில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடைய துணையாளர் ஒருவரும் பயணம் செய்ய சலுகை அளித்திட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியான ஸ்மார்ட் கார்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment