FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 20, 2015

சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு


இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு

மன்னார்குடி - 18

மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் சுயம்வரம் நேர்க்கானல் நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது, திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை ஶ்ரீகீதாபவன் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் சோழ மண்டல அளவிலான சுயம்வரம் நேர்க்காணல் நிகழ்ச்சி இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. இச்சுயம்வரம் நிகழ்ச்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இச்சுயவரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு ரூ2லட்சம் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும்.

திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக உணவுத்துறை மற்றும் இந்து சமயஅறநிலை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புறையாற்றி பேசுகிறார் நிகழ்ச்சியில். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலதலைவர்கள் கோ.சிதம்பரநாதன், பா.சிம்மசந்திரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ், தரணி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.காமராஜ், நகர மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், வட்டார ஊராட்சி தலைவர் உதயகுமாரி தமிழ்கண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள 9486741985 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment