FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, July 20, 2015

சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு


இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சுயம்வரம் நேர்க்கானலில் பங்குபெற அழைப்பு

மன்னார்குடி - 18

மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்று திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் சுயம்வரம் நேர்க்கானல் நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது, திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை ஶ்ரீகீதாபவன் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் சோழ மண்டல அளவிலான சுயம்வரம் நேர்க்காணல் நிகழ்ச்சி இம்மாதம் 26ம் தேதி மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. இச்சுயம்வரம் நிகழ்ச்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள், விதைவைகள், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இச்சுயவரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு ரூ2லட்சம் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும்.

திருவாரூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக உணவுத்துறை மற்றும் இந்து சமயஅறநிலை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புறையாற்றி பேசுகிறார் நிகழ்ச்சியில். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலதலைவர்கள் கோ.சிதம்பரநாதன், பா.சிம்மசந்திரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ், தரணி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.காமராஜ், நகர மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், வட்டார ஊராட்சி தலைவர் உதயகுமாரி தமிழ்கண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள 9486741985 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட மாற்று தறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment