FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 31, 2015

காதுகேளாத குழந்தைகளுக்குஇலவச பரிசோதனை முகாம்

31.07.2015
கிருஷ்ணகிரி:"பர்கூரில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி, காது கேளாத குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்ரீகாமாட்சி மகாலில், அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பர்கூர் அரிமா சங்கம் சார்பாக, காது கேளாத குழந்தைகளுக்கு, இலவச காக்லியன் இம்ளாண்ட் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது.

இந்த முகாமில், 6 வயதிற்குட்பட்ட, காதுகேளாத குழந்தைகள் இருந்தால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பெயருடனான ரேஷன் கார்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை எடுத்து வர வேண்டும்.

காப்பீடு அட்டை இல்லாதவர்களும், முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வயது வரம்பின்றி இலவசமாக அனைவருக்கும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்படும். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment