FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 31, 2015

காதுகேளாத குழந்தைகளுக்குஇலவச பரிசோதனை முகாம்

31.07.2015
கிருஷ்ணகிரி:"பர்கூரில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி, காது கேளாத குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்ரீகாமாட்சி மகாலில், அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பர்கூர் அரிமா சங்கம் சார்பாக, காது கேளாத குழந்தைகளுக்கு, இலவச காக்லியன் இம்ளாண்ட் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது.

இந்த முகாமில், 6 வயதிற்குட்பட்ட, காதுகேளாத குழந்தைகள் இருந்தால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பெயருடனான ரேஷன் கார்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை எடுத்து வர வேண்டும்.

காப்பீடு அட்டை இல்லாதவர்களும், முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வயது வரம்பின்றி இலவசமாக அனைவருக்கும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்படும். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment