FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, July 31, 2015

காதுகேளாத குழந்தைகளுக்குஇலவச பரிசோதனை முகாம்

31.07.2015
கிருஷ்ணகிரி:"பர்கூரில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி, காது கேளாத குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்ரீகாமாட்சி மகாலில், அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பர்கூர் அரிமா சங்கம் சார்பாக, காது கேளாத குழந்தைகளுக்கு, இலவச காக்லியன் இம்ளாண்ட் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது.

இந்த முகாமில், 6 வயதிற்குட்பட்ட, காதுகேளாத குழந்தைகள் இருந்தால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பெயருடனான ரேஷன் கார்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை எடுத்து வர வேண்டும்.

காப்பீடு அட்டை இல்லாதவர்களும், முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வயது வரம்பின்றி இலவசமாக அனைவருக்கும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்படும். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment