FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, July 5, 2015

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்: டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம்


புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 4 இடங்களை, பெண்களே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். அரசுத் தேர்வுகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் (சிஎஸ்இ) மிகவும் கடினமானது என வர்ணிக்கப்படுகிறது. இது முதனிலை, மெயின் மற்றும் நேர்முக தேர்வு என்கிற 3 நிலைகளை கொண்டது. முதனிலை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பரில் நடக்கும் ெமயின் ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதையடுத்து, ஏப்ரல் அல்லது மே மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், காலியாக உள்ள 1364 பணியிடங்களை நடத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் 59 மையங்களும், 2,137 இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுதுவதற்கு 9.45 லட்சம்பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4.51 லட்சம் பேர் மட்டுமே முதனிலை தேர்வை எழுதினார்கள். அதில், 16,933 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெயின் ேதர்வுக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். கடந்த டிசம்பரில் நடந்த இந்த தேர்வில், 16,286 மட்டுமே பங்கேற்றனர். இதன் முடிவுகள் கடந்த மார்ச் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு 3,308 பேர் அழைக்கப்பட்டனர். ஏப்ரல் 27ல் இருந்து ஜூன் 30ம் தேதி வரைக்கும், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3,303 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேர்முகத் தேர்வு முடிவடைந்த நான்கு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், ேநற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் அசத்தல்: இதில் டெல்லியை சேர்ந்த பெண் மாற்றுத் திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஐஆர்எஸ் அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். இரண்டாம் இடத்தை, கேரளாவை சேர்ந்த மருத்துவர் ரெனு ராஜும், மூன்றாம் இடத்தை டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி நிதி குப்தாவும் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த வந்தனா ராவ் 4ம் இடத்தை பிடித்தார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தை ஐஆர்எஸ் அதிகாரி சுகர்ஷா பகத் பிடித்துள்ளார்.

எந்த வகுப்பு: தேர்வான 1,236 பேரில், 590 பேர் பொது வகுப்பையும், 354 பேர் ஓபிசி வகுப்பையும், 194 பேர் எஸ்சி, 98 பேர் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள்.

என்ன பொறுப்பு: 1,236 பேரில் ஐஏஎஸ் பொறுப்புக்கு 180 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். ஐபிஎஸ் பொறுப்புக்கு 150 பேரும், ஐஎப்எஸ் பொறுப்புக்கு 32 பேரும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். மத்திய அரசின் குரூப் ஏ பணிகளுக்காக 710 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ரயில்வே, பாதுகாப்பு அமைச்சகம், தபால் துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வழங்கப்படும். குரூப் பி பணிகளுக்கு 292 பேருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள், யூனியன் பிரதேசங்களான டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள், டையு டாமன், தாத்ரா நாகர் ஹவேலி, பாண்டிச் சேரி ஆகிய இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். காலியாக உள்ள 1364 இடங்கள் நிரப்பட வேண்டும். இவற்றில், சிவில் சர்வீசஸ் ேதர்வின் மூலம் 1236 இடங்களும், பதவி உயர்வின் வழியே மீதம் உள்ள 128 இடங்களும் நிரப்பப்படும்.

பிரதமர் வாழ்த்து

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலிடம் பிடித்தது குறித்து, இரா சிங்கால் கூறுகையில், ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை. மிகவும் தீவிரமாக எல்லாம் நான் படிக்கவில்லை. நான் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்றார். 2ம் இடம் பிடித்த ரெனு ராஜ் கூறும்போது, ‘மிக மிக மகழ்ச்சியாக உள்ளது. இந்த தேர்வுக்காக நான் ஓராண்டு காலமாக படித்தேன்’ என்றார். இவர் கேரள மாநிம் கொல்லம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment