FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 6, 2015

புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம்


5.07.2015
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 05/07/2015 அன்று மாலை 6 மணியளவில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள புதுச்சேரி காதுகேளாதோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் இரா.சரவணன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஸ், செயலாளராக பி.ஜி.பாலமுருகன் , பொருளாளராக மதன்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. புதுச்சேரி அரசு 2008ல் அறிவித்த தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை 5 லட்சம், 3 லட்சம், மற்றும் 2 லட்சம் இதுவரை தரவில்லை. பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அரசு உடனடியாக அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

2. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.

3. காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க நிலநிற நம்பர் பிளேட் மற்றும் பெரிய அளவு சய்டு மிரர் அமைத்து டெல்லி உயர்நிதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இப்படிக்கு,
இரா.சரவணன்
ஆலோசகர்,

No comments:

Post a Comment