FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, July 6, 2015

புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம்


5.07.2015
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 05/07/2015 அன்று மாலை 6 மணியளவில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள புதுச்சேரி காதுகேளாதோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் இரா.சரவணன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஸ், செயலாளராக பி.ஜி.பாலமுருகன் , பொருளாளராக மதன்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. புதுச்சேரி அரசு 2008ல் அறிவித்த தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை 5 லட்சம், 3 லட்சம், மற்றும் 2 லட்சம் இதுவரை தரவில்லை. பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அரசு உடனடியாக அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

2. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.

3. காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க நிலநிற நம்பர் பிளேட் மற்றும் பெரிய அளவு சய்டு மிரர் அமைத்து டெல்லி உயர்நிதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இப்படிக்கு,
இரா.சரவணன்
ஆலோசகர்,

No comments:

Post a Comment