FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 6, 2015

புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம்


5.07.2015
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 05/07/2015 அன்று மாலை 6 மணியளவில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள புதுச்சேரி காதுகேளாதோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் இரா.சரவணன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஸ், செயலாளராக பி.ஜி.பாலமுருகன் , பொருளாளராக மதன்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1. புதுச்சேரி அரசு 2008ல் அறிவித்த தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை 5 லட்சம், 3 லட்சம், மற்றும் 2 லட்சம் இதுவரை தரவில்லை. பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அரசு உடனடியாக அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

2. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.

3. காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க நிலநிற நம்பர் பிளேட் மற்றும் பெரிய அளவு சய்டு மிரர் அமைத்து டெல்லி உயர்நிதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இப்படிக்கு,
இரா.சரவணன்
ஆலோசகர்,

No comments:

Post a Comment