FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, July 13, 2015

கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மந்திரி யு.டி.காதர் தகவல்

12.07.2015, மங்களூரு,
கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

இலவச சிகிச்சை

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாநில அரசு ரூ.1½ லட்சமும், மத்திய அரசு ரூ.3 லட்சமும் நிதி உதவி செய்கிறது.

இந்த சிகிச்சையை செய்ய மொத்தம் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனையினர் அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.

120 குழந்தைகள் தேர்வு

முதற்கட்டமாக இந்த சிகிச்சைக்கு மாநிலம் முழுவதும் 120 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் 12 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் 150 வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் எனது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அது சரியல்ல. அதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment