FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 13, 2015

கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மந்திரி யு.டி.காதர் தகவல்

12.07.2015, மங்களூரு,
கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

இலவச சிகிச்சை

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாநில அரசு ரூ.1½ லட்சமும், மத்திய அரசு ரூ.3 லட்சமும் நிதி உதவி செய்கிறது.

இந்த சிகிச்சையை செய்ய மொத்தம் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனையினர் அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.

120 குழந்தைகள் தேர்வு

முதற்கட்டமாக இந்த சிகிச்சைக்கு மாநிலம் முழுவதும் 120 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் 12 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் 150 வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் எனது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அது சரியல்ல. அதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment