FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, July 7, 2015

கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் பிரிவிற்கு மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.7–
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் உள்ள பி. எட் ஸ்பெஷல் பிரிவிற்கு டெல்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் கலை மற்றும் அறிவியல் படிப்பதிலும் அதனை படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் பணிக்கு செல்வதை காணமுடிகிறது.
எனவே கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் துவங்கப் பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு பி.எட் சிறப்புபிரிவாகும். அதாவது இங்கு பி.எட் படித்தவர்கள் காதுகேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பி.எட் ஆசிரியர்களைப் போலவும் பணியாற்ற சிறப்பு பயிற்சி அளிப்பதால் இந்தியாவில் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை பி.எட் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் அதிக ஊதியத்தில் பணிக்கு சென்றுள்ளார்கள்.
மேலும் புது டில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலின்கீழ் இந்தியாவில் மொத்தம் 447 பி.எட் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல் படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .மேலும் இதில் தமிழ் நாட்டில் 40 இடங்களில், கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் சிறப்பு பெயர் இடம்பெற்று பாராட்டப்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம்பெற்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக் கழகத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது என்று துணை வேந்தர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த பி.எட் சிறப்பு பயிற்சி 2 ஆண்டு படிப்பாகும். இதில் 2ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு பள்ளிகளில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசலு கூறினார்.

No comments:

Post a Comment