FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, July 7, 2015

கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் பிரிவிற்கு மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.7–
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் உள்ள பி. எட் ஸ்பெஷல் பிரிவிற்கு டெல்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் கலை மற்றும் அறிவியல் படிப்பதிலும் அதனை படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் பணிக்கு செல்வதை காணமுடிகிறது.
எனவே கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் துவங்கப் பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு பி.எட் சிறப்புபிரிவாகும். அதாவது இங்கு பி.எட் படித்தவர்கள் காதுகேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பி.எட் ஆசிரியர்களைப் போலவும் பணியாற்ற சிறப்பு பயிற்சி அளிப்பதால் இந்தியாவில் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை பி.எட் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் அதிக ஊதியத்தில் பணிக்கு சென்றுள்ளார்கள்.
மேலும் புது டில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலின்கீழ் இந்தியாவில் மொத்தம் 447 பி.எட் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல் படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .மேலும் இதில் தமிழ் நாட்டில் 40 இடங்களில், கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் சிறப்பு பெயர் இடம்பெற்று பாராட்டப்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம்பெற்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக் கழகத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது என்று துணை வேந்தர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த பி.எட் சிறப்பு பயிற்சி 2 ஆண்டு படிப்பாகும். இதில் 2ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு பள்ளிகளில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசலு கூறினார்.

No comments:

Post a Comment