FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, July 7, 2015

கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் பிரிவிற்கு மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.7–
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் உள்ள பி. எட் ஸ்பெஷல் பிரிவிற்கு டெல்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் கலை மற்றும் அறிவியல் படிப்பதிலும் அதனை படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் பணிக்கு செல்வதை காணமுடிகிறது.
எனவே கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் துவங்கப் பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு பி.எட் சிறப்புபிரிவாகும். அதாவது இங்கு பி.எட் படித்தவர்கள் காதுகேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பி.எட் ஆசிரியர்களைப் போலவும் பணியாற்ற சிறப்பு பயிற்சி அளிப்பதால் இந்தியாவில் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை பி.எட் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் அதிக ஊதியத்தில் பணிக்கு சென்றுள்ளார்கள்.
மேலும் புது டில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலின்கீழ் இந்தியாவில் மொத்தம் 447 பி.எட் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல் படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .மேலும் இதில் தமிழ் நாட்டில் 40 இடங்களில், கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் சிறப்பு பெயர் இடம்பெற்று பாராட்டப்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம்பெற்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக் கழகத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது என்று துணை வேந்தர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த பி.எட் சிறப்பு பயிற்சி 2 ஆண்டு படிப்பாகும். இதில் 2ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு பள்ளிகளில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசலு கூறினார்.

No comments:

Post a Comment