FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 13, 2015

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




No comments:

Post a Comment