FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, July 13, 2015

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




No comments:

Post a Comment