FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, July 13, 2015

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




No comments:

Post a Comment