FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 13, 2015

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




No comments:

Post a Comment