FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, May 5, 2017

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 22-ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் அறிவிப்பு

03.05.2017
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 22 முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங் களின் கூட்டு இயக்கம் அறிவித் துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த டி.எம்.என்.தீபக், பி.ஜான்சிராணி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத ஊனம் இருந்தாலே நிபந்தனைகள் ஏதுமின்றி உதவித்தொகை வழங்கக் கோரி கடந்த ஆண்டு போராட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில் 40 சத வீதம் ஊனம் உள்ள வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப் பட்டிருந்தது. இருப்பினும், சிறு சிறு நிரந்தரமற்ற வேலைகளை செய்து சொற்ப வருமானம் பெறும் வேலையைக் கூட காரணம் காட்டி உதவித்தொகை கிடைப்பதை அதிகாரிகள் தடுத்து வந்தனர்.

எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்தர அரசு வேலை மட்டுமே என பொருள்படும்படி திருத்தம் தேவை என அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இந்த திருத் தத்தை மேற்கொள்வதாக அதி காரிகள் தெரிவித்தனர். எனினும், இதுநாள்வரை அரசாணையை மதிக்காமல் மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகை கிடைக் காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் அவல நிலையே நீடிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.

எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்த அரசு வேலை மட்டுமே என திருத்தம் செய்து 40 சதவீத ஊனமுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும், 75 சதவீதத்துக்கும் மேல் பாதித்த பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்டோருக் கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சென்னை யில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் வரும் மே 22-ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment