FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 5, 2017

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 22-ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் அறிவிப்பு

03.05.2017
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 22 முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங் களின் கூட்டு இயக்கம் அறிவித் துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த டி.எம்.என்.தீபக், பி.ஜான்சிராணி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத ஊனம் இருந்தாலே நிபந்தனைகள் ஏதுமின்றி உதவித்தொகை வழங்கக் கோரி கடந்த ஆண்டு போராட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில் 40 சத வீதம் ஊனம் உள்ள வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப் பட்டிருந்தது. இருப்பினும், சிறு சிறு நிரந்தரமற்ற வேலைகளை செய்து சொற்ப வருமானம் பெறும் வேலையைக் கூட காரணம் காட்டி உதவித்தொகை கிடைப்பதை அதிகாரிகள் தடுத்து வந்தனர்.

எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்தர அரசு வேலை மட்டுமே என பொருள்படும்படி திருத்தம் தேவை என அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இந்த திருத் தத்தை மேற்கொள்வதாக அதி காரிகள் தெரிவித்தனர். எனினும், இதுநாள்வரை அரசாணையை மதிக்காமல் மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகை கிடைக் காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் அவல நிலையே நீடிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.

எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்த அரசு வேலை மட்டுமே என திருத்தம் செய்து 40 சதவீத ஊனமுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும், 75 சதவீதத்துக்கும் மேல் பாதித்த பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்டோருக் கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சென்னை யில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் வரும் மே 22-ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment