FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, May 13, 2017

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

13.05.2017
கோவை மாவட்டம் கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் தாளாளராக இருப்பவர் முருகசாமி. சிறு வயதில் இருந்தே காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் முருகசாமி பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடந்த 1997-ஆம் ஆண்டு இப்பள்ளியை ஆரம்பித்தார். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியை பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்திய முருகசாமியின் முயற்சியில், தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இதே பள்ளியில் கடந்த 2012 - 13-ஆம் ஆண்டில் படித்த மாணவி ஒருவர், பள்ளியின் தாளாளர் முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார். தற்போது திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்துவரும் அந்த பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தான் படிக்கும் போது முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முருகசாமி தன் கருவை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முருகசாமி தன்னை மிரட்டியதால் அப்போது இது குறித்து முன்பு வெளியில் கூறவில்லை என்றும் தற்போது அங்கு படிக்கும் மாணவிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகசாமி மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதே போல, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பள்ளி மேற்பார்வையாளரான சித்ரா தேவி, வார்டன் பரிமளா, மாற்றுத்திறனாளி பெண்ணான ரேவதி மற்றும் ரேவதியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு மேற்பார்வையாளரான ராணியை போலீசார் தேடிவருகின்றனர். 12-ஆம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லவுள்ள சிலர் பள்ளி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பள்ளி நிர்வாக தரப்பு இது பொய்ப் புகார் எனவும் சட்டப்படி இதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறையினர் வந்து செல்வது அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த பெண் பள்ளியில் படித்தபோது செய்த தவறுகளுக்காக நடவடிக்கை எடுத்ததால் முருகசாமி மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக அந்த பள்ளி மாணவிகள் கூறுகின்றனர்.

கோதபாளையாம் காது கேளாதோர் பள்ளியின் தாளாளர் மீதான பாலியல் வன்கொடுமை புகரால் அந்த பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment