FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, May 13, 2017

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

13.05.2017
கோவை மாவட்டம் கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் தாளாளராக இருப்பவர் முருகசாமி. சிறு வயதில் இருந்தே காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் முருகசாமி பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடந்த 1997-ஆம் ஆண்டு இப்பள்ளியை ஆரம்பித்தார். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியை பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்திய முருகசாமியின் முயற்சியில், தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இதே பள்ளியில் கடந்த 2012 - 13-ஆம் ஆண்டில் படித்த மாணவி ஒருவர், பள்ளியின் தாளாளர் முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார். தற்போது திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்துவரும் அந்த பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தான் படிக்கும் போது முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முருகசாமி தன் கருவை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முருகசாமி தன்னை மிரட்டியதால் அப்போது இது குறித்து முன்பு வெளியில் கூறவில்லை என்றும் தற்போது அங்கு படிக்கும் மாணவிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகசாமி மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதே போல, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பள்ளி மேற்பார்வையாளரான சித்ரா தேவி, வார்டன் பரிமளா, மாற்றுத்திறனாளி பெண்ணான ரேவதி மற்றும் ரேவதியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு மேற்பார்வையாளரான ராணியை போலீசார் தேடிவருகின்றனர். 12-ஆம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லவுள்ள சிலர் பள்ளி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பள்ளி நிர்வாக தரப்பு இது பொய்ப் புகார் எனவும் சட்டப்படி இதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறையினர் வந்து செல்வது அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த பெண் பள்ளியில் படித்தபோது செய்த தவறுகளுக்காக நடவடிக்கை எடுத்ததால் முருகசாமி மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக அந்த பள்ளி மாணவிகள் கூறுகின்றனர்.

கோதபாளையாம் காது கேளாதோர் பள்ளியின் தாளாளர் மீதான பாலியல் வன்கொடுமை புகரால் அந்த பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment