FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, May 13, 2017

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

13.05.2017
கோவை மாவட்டம் கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் தாளாளராக இருப்பவர் முருகசாமி. சிறு வயதில் இருந்தே காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் முருகசாமி பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடந்த 1997-ஆம் ஆண்டு இப்பள்ளியை ஆரம்பித்தார். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியை பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்திய முருகசாமியின் முயற்சியில், தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இதே பள்ளியில் கடந்த 2012 - 13-ஆம் ஆண்டில் படித்த மாணவி ஒருவர், பள்ளியின் தாளாளர் முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார். தற்போது திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்துவரும் அந்த பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தான் படிக்கும் போது முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முருகசாமி தன் கருவை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முருகசாமி தன்னை மிரட்டியதால் அப்போது இது குறித்து முன்பு வெளியில் கூறவில்லை என்றும் தற்போது அங்கு படிக்கும் மாணவிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகசாமி மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதே போல, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பள்ளி மேற்பார்வையாளரான சித்ரா தேவி, வார்டன் பரிமளா, மாற்றுத்திறனாளி பெண்ணான ரேவதி மற்றும் ரேவதியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு மேற்பார்வையாளரான ராணியை போலீசார் தேடிவருகின்றனர். 12-ஆம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லவுள்ள சிலர் பள்ளி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பள்ளி நிர்வாக தரப்பு இது பொய்ப் புகார் எனவும் சட்டப்படி இதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறையினர் வந்து செல்வது அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த பெண் பள்ளியில் படித்தபோது செய்த தவறுகளுக்காக நடவடிக்கை எடுத்ததால் முருகசாமி மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக அந்த பள்ளி மாணவிகள் கூறுகின்றனர்.

கோதபாளையாம் காது கேளாதோர் பள்ளியின் தாளாளர் மீதான பாலியல் வன்கொடுமை புகரால் அந்த பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment