FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, May 13, 2017

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

13.05.2017
கோவை மாவட்டம் கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் தாளாளராக இருப்பவர் முருகசாமி. சிறு வயதில் இருந்தே காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் முருகசாமி பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடந்த 1997-ஆம் ஆண்டு இப்பள்ளியை ஆரம்பித்தார். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியை பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்திய முருகசாமியின் முயற்சியில், தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இதே பள்ளியில் கடந்த 2012 - 13-ஆம் ஆண்டில் படித்த மாணவி ஒருவர், பள்ளியின் தாளாளர் முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார். தற்போது திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்துவரும் அந்த பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தான் படிக்கும் போது முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முருகசாமி தன் கருவை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முருகசாமி தன்னை மிரட்டியதால் அப்போது இது குறித்து முன்பு வெளியில் கூறவில்லை என்றும் தற்போது அங்கு படிக்கும் மாணவிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகசாமி மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதே போல, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பள்ளி மேற்பார்வையாளரான சித்ரா தேவி, வார்டன் பரிமளா, மாற்றுத்திறனாளி பெண்ணான ரேவதி மற்றும் ரேவதியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு மேற்பார்வையாளரான ராணியை போலீசார் தேடிவருகின்றனர். 12-ஆம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லவுள்ள சிலர் பள்ளி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பள்ளி நிர்வாக தரப்பு இது பொய்ப் புகார் எனவும் சட்டப்படி இதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறையினர் வந்து செல்வது அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த பெண் பள்ளியில் படித்தபோது செய்த தவறுகளுக்காக நடவடிக்கை எடுத்ததால் முருகசாமி மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக அந்த பள்ளி மாணவிகள் கூறுகின்றனர்.

கோதபாளையாம் காது கேளாதோர் பள்ளியின் தாளாளர் மீதான பாலியல் வன்கொடுமை புகரால் அந்த பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment