FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 10, 2017

காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வட்டாட்சியர் ஆய்வு


கோவை: காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான முருகசாமி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நடத்தும் பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகிய 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் தங்கி படிக்கும் மாற்று திறனாளி மாணவிகளின் பராமரிப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியானதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் இருவரும் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி, புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பள்ளி குறித்த முழு விபரங்களையும் கேட்டு இருப்பதாகவும், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி உரிமம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும், புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment