FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, May 10, 2017

காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வட்டாட்சியர் ஆய்வு


கோவை: காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான முருகசாமி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நடத்தும் பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகிய 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் தங்கி படிக்கும் மாற்று திறனாளி மாணவிகளின் பராமரிப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியானதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் இருவரும் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி, புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பள்ளி குறித்த முழு விபரங்களையும் கேட்டு இருப்பதாகவும், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி உரிமம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும், புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment