FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 10, 2017

காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வட்டாட்சியர் ஆய்வு


கோவை: காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான முருகசாமி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நடத்தும் பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகிய 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் தங்கி படிக்கும் மாற்று திறனாளி மாணவிகளின் பராமரிப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியானதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் இருவரும் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி, புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பள்ளி குறித்த முழு விபரங்களையும் கேட்டு இருப்பதாகவும், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி உரிமம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும், புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment