FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, May 10, 2017

காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வட்டாட்சியர் ஆய்வு


கோவை: காதுகேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான முருகசாமி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நடத்தும் பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகிய 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் தங்கி படிக்கும் மாற்று திறனாளி மாணவிகளின் பராமரிப்பு மற்றும் கல்வி கேள்விக்குறியானதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் இருவரும் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி, புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பள்ளி குறித்த முழு விபரங்களையும் கேட்டு இருப்பதாகவும், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி உரிமம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும், புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment