FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, May 10, 2017

சோமனூரில் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் உட்பட 5 பேர் கைது

10.05.2017
சோமனூர்:
கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் உள்ள திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் ‘’திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’’ உள்ளது. பள்ளியின் தாளாளர் முருகசாமி(57). இந்நிலையில், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி மற்றும் தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவர் வாய்பேச முடியாத சவுமியா (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாய்பேச முடியாத ஒருவருடன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில், சவுமியா கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று தன் கணவருடன் வந்து புகார் அளித்தார். புகாரில், ‘2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார்’ என தெரிவித்து இருந்தார்.

மேலும், இவருடன் முன்னாள் மாணவி மற்றும் தற்போது அதே பள்ளியில் பணியாற்றி வரும் 21 வயதான இளம் பெண் ஒருவரும் பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி(40), பயிற்றுனர்கள் பிரமிளா(28), ரேவதி(30), பாபு (35) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளும் பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்க மாவட்ட மாற்றுத்திறனாளி பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரனுக்கு எஸ்.பி. ரம்யா பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment