FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 10, 2017

சோமனூரில் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் உட்பட 5 பேர் கைது

10.05.2017
சோமனூர்:
கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் உள்ள திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் ‘’திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’’ உள்ளது. பள்ளியின் தாளாளர் முருகசாமி(57). இந்நிலையில், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி மற்றும் தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவர் வாய்பேச முடியாத சவுமியா (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாய்பேச முடியாத ஒருவருடன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில், சவுமியா கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று தன் கணவருடன் வந்து புகார் அளித்தார். புகாரில், ‘2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார்’ என தெரிவித்து இருந்தார்.

மேலும், இவருடன் முன்னாள் மாணவி மற்றும் தற்போது அதே பள்ளியில் பணியாற்றி வரும் 21 வயதான இளம் பெண் ஒருவரும் பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி(40), பயிற்றுனர்கள் பிரமிளா(28), ரேவதி(30), பாபு (35) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளும் பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்க மாவட்ட மாற்றுத்திறனாளி பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரனுக்கு எஸ்.பி. ரம்யா பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment