FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, May 18, 2017

காதுகேளாதோர் மருத்துவ முகாம் 50 பயனாளிகளுக்கு கேட்கும் கருவி

17.05.2017 கோத்தகிரி : கோத்தகிரி ஆதிவாசி நலச்சங்கம் (நாவா) மற்றும் மத்திய அரசின் காதுகேளாதோர் பாதுகாப்பு துறை சார்பில், காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் நாவா வளாகத்தில் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ், தலைவர் முத்துலட்சுமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஹரிபிரசாத் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோர், காதுகேளாதோரை பரிசோதனை செய்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட, பொதுமக்கள், 50 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கான பேட்டரி வழங்கப்பட்டன. மேலும், காதுகேளாத குழந்தைகளை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தால், காதுகேளாத குறையை தடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.தவிர, கடந்த ஆண்டு, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ் பெற்றுவருபவர்களுக்கு, இத்திட்டம் மூலம், தேவையான சிகிச்சை அளித்து கருவிகளும், ஊனமுற்றோருக்கு, ஊன்று கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் 'நாவா' நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நாவா கல்வி இயக்குனர் விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட, திரளான பயனாளிகள் பங்கேற்றனர்.---

No comments:

Post a Comment