FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, May 18, 2017

காதுகேளாதோர் மருத்துவ முகாம் 50 பயனாளிகளுக்கு கேட்கும் கருவி

17.05.2017 கோத்தகிரி : கோத்தகிரி ஆதிவாசி நலச்சங்கம் (நாவா) மற்றும் மத்திய அரசின் காதுகேளாதோர் பாதுகாப்பு துறை சார்பில், காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் நாவா வளாகத்தில் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ், தலைவர் முத்துலட்சுமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஹரிபிரசாத் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோர், காதுகேளாதோரை பரிசோதனை செய்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட, பொதுமக்கள், 50 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கான பேட்டரி வழங்கப்பட்டன. மேலும், காதுகேளாத குழந்தைகளை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தால், காதுகேளாத குறையை தடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.தவிர, கடந்த ஆண்டு, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ் பெற்றுவருபவர்களுக்கு, இத்திட்டம் மூலம், தேவையான சிகிச்சை அளித்து கருவிகளும், ஊனமுற்றோருக்கு, ஊன்று கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் 'நாவா' நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நாவா கல்வி இயக்குனர் விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட, திரளான பயனாளிகள் பங்கேற்றனர்.---

No comments:

Post a Comment