FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, May 18, 2017

காதுகேளாதோர் மருத்துவ முகாம் 50 பயனாளிகளுக்கு கேட்கும் கருவி

17.05.2017 கோத்தகிரி : கோத்தகிரி ஆதிவாசி நலச்சங்கம் (நாவா) மற்றும் மத்திய அரசின் காதுகேளாதோர் பாதுகாப்பு துறை சார்பில், காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் நாவா வளாகத்தில் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ், தலைவர் முத்துலட்சுமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஹரிபிரசாத் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோர், காதுகேளாதோரை பரிசோதனை செய்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட, பொதுமக்கள், 50 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கான பேட்டரி வழங்கப்பட்டன. மேலும், காதுகேளாத குழந்தைகளை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தால், காதுகேளாத குறையை தடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.தவிர, கடந்த ஆண்டு, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ் பெற்றுவருபவர்களுக்கு, இத்திட்டம் மூலம், தேவையான சிகிச்சை அளித்து கருவிகளும், ஊனமுற்றோருக்கு, ஊன்று கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் 'நாவா' நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நாவா கல்வி இயக்குனர் விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட, திரளான பயனாளிகள் பங்கேற்றனர்.---

No comments:

Post a Comment