FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, May 18, 2017

காதுகேளாதோர் மருத்துவ முகாம் 50 பயனாளிகளுக்கு கேட்கும் கருவி

17.05.2017 கோத்தகிரி : கோத்தகிரி ஆதிவாசி நலச்சங்கம் (நாவா) மற்றும் மத்திய அரசின் காதுகேளாதோர் பாதுகாப்பு துறை சார்பில், காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் நாவா வளாகத்தில் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ், தலைவர் முத்துலட்சுமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஹரிபிரசாத் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோர், காதுகேளாதோரை பரிசோதனை செய்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட, பொதுமக்கள், 50 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கான பேட்டரி வழங்கப்பட்டன. மேலும், காதுகேளாத குழந்தைகளை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தால், காதுகேளாத குறையை தடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.தவிர, கடந்த ஆண்டு, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ் பெற்றுவருபவர்களுக்கு, இத்திட்டம் மூலம், தேவையான சிகிச்சை அளித்து கருவிகளும், ஊனமுற்றோருக்கு, ஊன்று கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் 'நாவா' நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நாவா கல்வி இயக்குனர் விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட, திரளான பயனாளிகள் பங்கேற்றனர்.---

No comments:

Post a Comment