FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, May 18, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி வேடங்களுக்கு போட்டி போடும் ஹீரோ – ஹீரோயின்

17.05.2017
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் உள்பட பலர் மாற்றுத்திறனாளிகளாக நடித்தால் அதனை ஆவலுடன் பார்ப்பார்கள். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் யாரும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயின்கள் மாற்றுத்திறனாளி வேடத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கின்றனர். அந்தவகையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து கொலையுதிர் காலம் படத்திலும், காது கேளாத, வாய் பேச முடியாத ஹீரோயினாக நடிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருந்தாவனம் படத்தில் காது கேளாதவர் வேடத்தில் அருள் நிதி நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளி வேடங்கள் கொண்ட கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களை தொந்தரவு செய்கிறார்களாம்.

No comments:

Post a Comment