FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, May 18, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி வேடங்களுக்கு போட்டி போடும் ஹீரோ – ஹீரோயின்

17.05.2017
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் உள்பட பலர் மாற்றுத்திறனாளிகளாக நடித்தால் அதனை ஆவலுடன் பார்ப்பார்கள். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் யாரும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயின்கள் மாற்றுத்திறனாளி வேடத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கின்றனர். அந்தவகையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து கொலையுதிர் காலம் படத்திலும், காது கேளாத, வாய் பேச முடியாத ஹீரோயினாக நடிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருந்தாவனம் படத்தில் காது கேளாதவர் வேடத்தில் அருள் நிதி நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளி வேடங்கள் கொண்ட கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களை தொந்தரவு செய்கிறார்களாம்.

No comments:

Post a Comment