FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, May 11, 2017

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: அதிகாரிகள் விசாரணை



கோவை: திருப்பூர் அருகே உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தனி அறையில் மாணவிகளிடம் அதிகாரிகள் புதன்கிழமை (இன்று) விசாரணை நடத்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி.



மாற்றுத்திறனாளியான முருகசாமி பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இராணி என்பவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் கருமத்தம்பட்டி விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி:

புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை தொடர்ந்து கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனி அறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தூடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சைகை மொழியில் மாணவிகள் கூறிய கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment