FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, May 11, 2017

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: அதிகாரிகள் விசாரணை



கோவை: திருப்பூர் அருகே உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தனி அறையில் மாணவிகளிடம் அதிகாரிகள் புதன்கிழமை (இன்று) விசாரணை நடத்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி.



மாற்றுத்திறனாளியான முருகசாமி பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இராணி என்பவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் கருமத்தம்பட்டி விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி:

புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை தொடர்ந்து கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனி அறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தூடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சைகை மொழியில் மாணவிகள் கூறிய கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment