FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, May 11, 2017

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: அதிகாரிகள் விசாரணை



கோவை: திருப்பூர் அருகே உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தனி அறையில் மாணவிகளிடம் அதிகாரிகள் புதன்கிழமை (இன்று) விசாரணை நடத்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி.



மாற்றுத்திறனாளியான முருகசாமி பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இராணி என்பவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் கருமத்தம்பட்டி விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி:

புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை தொடர்ந்து கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனி அறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தூடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சைகை மொழியில் மாணவிகள் கூறிய கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment