FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, May 13, 2017

செவிப்புலன் குறைந்த மாதைக் காரணமில்லாமல் தடுத்து வைத்த விமான நிலைய அதிகாரிகள்

11.05.2017
அமெரிக்காவின் ஹவாயி மாநில விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட செவிப்புலன் குறைந்த மாதுக்கு சைகை மொழி உரைபெயர்ப்பாளரை நியமிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தமது காதலரைச் சந்திக்க ஹானலூலு சென்ற அந்த மாதை, விசாரணைக்காக,அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

முன்பு அமெரிக்காவில் அனைத்துலக மாணவராக இருந்தது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜப்பானிய சைகை மொழியைப் பயன்படுத்தும் அவர் ஆங்கில சைகை மொழி உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் அவ்வாறு ஒருவரை வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.

அதனால் மாது சிரமப்பட்டு உதட்டு அசைவுகளுடன், ஆங்கிலத்தில் எழுதி அதிகாரிகளிடம் உரையாட வேண்டியிருந்தது.

அதன் பின்னர், காரணமில்லாமல், கையில் விலங்கிட்டு அவரைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இதனால் எவ்வித சைகை மொழியைக் கொண்டும் மாதுவால் உரையாட முடியவில்லை.

அதிகாரிகள் அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் தமது நிலைமை குறித்து விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த காதலருக்கும் தெரிவிக்க முடியவில்லை.

அதற்கு பதிலாக காது கேளாத அவரைத் தொலைபேசியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன்பேச வைத்தனர் அதிகாரிகள்.

இவ்வாறு தமது உடற்குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாகவும் தம்மை அவமானப்படுத்தியதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் புகார் செய்துள்ளார்.

மறுநாள் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஜப்பான் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment