FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, May 13, 2017

செவிப்புலன் குறைந்த மாதைக் காரணமில்லாமல் தடுத்து வைத்த விமான நிலைய அதிகாரிகள்

11.05.2017
அமெரிக்காவின் ஹவாயி மாநில விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட செவிப்புலன் குறைந்த மாதுக்கு சைகை மொழி உரைபெயர்ப்பாளரை நியமிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தமது காதலரைச் சந்திக்க ஹானலூலு சென்ற அந்த மாதை, விசாரணைக்காக,அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

முன்பு அமெரிக்காவில் அனைத்துலக மாணவராக இருந்தது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜப்பானிய சைகை மொழியைப் பயன்படுத்தும் அவர் ஆங்கில சைகை மொழி உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் அவ்வாறு ஒருவரை வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.

அதனால் மாது சிரமப்பட்டு உதட்டு அசைவுகளுடன், ஆங்கிலத்தில் எழுதி அதிகாரிகளிடம் உரையாட வேண்டியிருந்தது.

அதன் பின்னர், காரணமில்லாமல், கையில் விலங்கிட்டு அவரைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இதனால் எவ்வித சைகை மொழியைக் கொண்டும் மாதுவால் உரையாட முடியவில்லை.

அதிகாரிகள் அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் தமது நிலைமை குறித்து விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த காதலருக்கும் தெரிவிக்க முடியவில்லை.

அதற்கு பதிலாக காது கேளாத அவரைத் தொலைபேசியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன்பேச வைத்தனர் அதிகாரிகள்.

இவ்வாறு தமது உடற்குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாகவும் தம்மை அவமானப்படுத்தியதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் புகார் செய்துள்ளார்.

மறுநாள் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஜப்பான் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment