FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, May 13, 2017

செவிப்புலன் குறைந்த மாதைக் காரணமில்லாமல் தடுத்து வைத்த விமான நிலைய அதிகாரிகள்

11.05.2017
அமெரிக்காவின் ஹவாயி மாநில விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட செவிப்புலன் குறைந்த மாதுக்கு சைகை மொழி உரைபெயர்ப்பாளரை நியமிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தமது காதலரைச் சந்திக்க ஹானலூலு சென்ற அந்த மாதை, விசாரணைக்காக,அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

முன்பு அமெரிக்காவில் அனைத்துலக மாணவராக இருந்தது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜப்பானிய சைகை மொழியைப் பயன்படுத்தும் அவர் ஆங்கில சைகை மொழி உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் அவ்வாறு ஒருவரை வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.

அதனால் மாது சிரமப்பட்டு உதட்டு அசைவுகளுடன், ஆங்கிலத்தில் எழுதி அதிகாரிகளிடம் உரையாட வேண்டியிருந்தது.

அதன் பின்னர், காரணமில்லாமல், கையில் விலங்கிட்டு அவரைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இதனால் எவ்வித சைகை மொழியைக் கொண்டும் மாதுவால் உரையாட முடியவில்லை.

அதிகாரிகள் அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் தமது நிலைமை குறித்து விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த காதலருக்கும் தெரிவிக்க முடியவில்லை.

அதற்கு பதிலாக காது கேளாத அவரைத் தொலைபேசியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன்பேச வைத்தனர் அதிகாரிகள்.

இவ்வாறு தமது உடற்குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாகவும் தம்மை அவமானப்படுத்தியதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் புகார் செய்துள்ளார்.

மறுநாள் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஜப்பான் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment