FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, May 13, 2017

செவிப்புலன் குறைந்த மாதைக் காரணமில்லாமல் தடுத்து வைத்த விமான நிலைய அதிகாரிகள்

11.05.2017
அமெரிக்காவின் ஹவாயி மாநில விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட செவிப்புலன் குறைந்த மாதுக்கு சைகை மொழி உரைபெயர்ப்பாளரை நியமிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தமது காதலரைச் சந்திக்க ஹானலூலு சென்ற அந்த மாதை, விசாரணைக்காக,அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

முன்பு அமெரிக்காவில் அனைத்துலக மாணவராக இருந்தது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜப்பானிய சைகை மொழியைப் பயன்படுத்தும் அவர் ஆங்கில சைகை மொழி உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் அவ்வாறு ஒருவரை வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.

அதனால் மாது சிரமப்பட்டு உதட்டு அசைவுகளுடன், ஆங்கிலத்தில் எழுதி அதிகாரிகளிடம் உரையாட வேண்டியிருந்தது.

அதன் பின்னர், காரணமில்லாமல், கையில் விலங்கிட்டு அவரைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இதனால் எவ்வித சைகை மொழியைக் கொண்டும் மாதுவால் உரையாட முடியவில்லை.

அதிகாரிகள் அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் தமது நிலைமை குறித்து விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த காதலருக்கும் தெரிவிக்க முடியவில்லை.

அதற்கு பதிலாக காது கேளாத அவரைத் தொலைபேசியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன்பேச வைத்தனர் அதிகாரிகள்.

இவ்வாறு தமது உடற்குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாகவும் தம்மை அவமானப்படுத்தியதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் புகார் செய்துள்ளார்.

மறுநாள் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஜப்பான் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment