FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 24, 2017

பார்வையற்றோர், காதுகேளாதோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க புதிய தொழில்நுட்பம்

கண் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க உதவும் புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண் பார்வை இல்லாதவர்கள் எழுத்துக்களைப் படிக்க, விரல்களால் தொட்டு உணரும் பிரெய்லி முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி பார்க்க வசதியாக புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வரிவடிவங்கள், பிரெய்லி முறைக்கு மாற்றப்பட்டு, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புக்கு அனுப்பப்படும். இந்த தொகுப்பு பிரத்யேக செயலியின் மூலம் விரல்களால் தொட்டு படித்துக் கொண்டே, கண்பார்யைற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.

ஸ்பெயினில் மேட்ரிட் ((Madrid)) நகரில் உள்ள சேனல்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம், பிற சேனல்களுக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment