FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 10, 2017

மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டண சலுகை பெற அடையாள அட்டை: விண்ணப்பித்தோர் பெற்றுக் கொள்ளலாம்

10.05.2017
ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை பெறுவதற்காக அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது கட்டணச் சலுகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் கட்டணச் சலுகையை பெறலாம்.

இந்நிலையில், இந்த அடையாள அட்டைக்கோரி விண்ணப்பித்த 9 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளி களுக்கு அட்டை தயாராக உள்ளது.

அவற்றை அவர்கள் இதுவரை பெறாததால் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மூத்த மண்டல வர்த்தக மேலாளரை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், காட்பாடி, ஜோலார் பேட்டையில் இந்த அட்டையைக் கோரி விண்ணப்பித்தவர்கள் அங் குள்ள ரயில் நிலைய மேலாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சேவையில் மாற்றம்


திருவாலங்காடு ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 10, 11, 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடம்பத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால் செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த இரு ரயில்களும் நிற்காது.

கூடுதல் பெட்டி இணைப்பு


புதுடெல்லி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (22404), 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பொதுப் பெட்டி ஜூன் 25-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஜூன் 28-ம் தேதி வரையிலும் இப்பெட்டி இணைக்கப்படும்.

No comments:

Post a Comment