FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 10, 2017

மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டண சலுகை பெற அடையாள அட்டை: விண்ணப்பித்தோர் பெற்றுக் கொள்ளலாம்

10.05.2017
ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை பெறுவதற்காக அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது கட்டணச் சலுகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் கட்டணச் சலுகையை பெறலாம்.

இந்நிலையில், இந்த அடையாள அட்டைக்கோரி விண்ணப்பித்த 9 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளி களுக்கு அட்டை தயாராக உள்ளது.

அவற்றை அவர்கள் இதுவரை பெறாததால் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மூத்த மண்டல வர்த்தக மேலாளரை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், காட்பாடி, ஜோலார் பேட்டையில் இந்த அட்டையைக் கோரி விண்ணப்பித்தவர்கள் அங் குள்ள ரயில் நிலைய மேலாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சேவையில் மாற்றம்


திருவாலங்காடு ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 10, 11, 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடம்பத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால் செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த இரு ரயில்களும் நிற்காது.

கூடுதல் பெட்டி இணைப்பு


புதுடெல்லி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (22404), 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பொதுப் பெட்டி ஜூன் 25-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஜூன் 28-ம் தேதி வரையிலும் இப்பெட்டி இணைக்கப்படும்.

No comments:

Post a Comment