FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, May 10, 2017

மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டண சலுகை பெற அடையாள அட்டை: விண்ணப்பித்தோர் பெற்றுக் கொள்ளலாம்

10.05.2017
ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை பெறுவதற்காக அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது கட்டணச் சலுகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் கட்டணச் சலுகையை பெறலாம்.

இந்நிலையில், இந்த அடையாள அட்டைக்கோரி விண்ணப்பித்த 9 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளி களுக்கு அட்டை தயாராக உள்ளது.

அவற்றை அவர்கள் இதுவரை பெறாததால் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மூத்த மண்டல வர்த்தக மேலாளரை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், காட்பாடி, ஜோலார் பேட்டையில் இந்த அட்டையைக் கோரி விண்ணப்பித்தவர்கள் அங் குள்ள ரயில் நிலைய மேலாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சேவையில் மாற்றம்


திருவாலங்காடு ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 10, 11, 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடம்பத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால் செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த இரு ரயில்களும் நிற்காது.

கூடுதல் பெட்டி இணைப்பு


புதுடெல்லி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (22404), 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பொதுப் பெட்டி ஜூன் 25-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஜூன் 28-ம் தேதி வரையிலும் இப்பெட்டி இணைக்கப்படும்.

No comments:

Post a Comment