FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, May 10, 2017

மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டண சலுகை பெற அடையாள அட்டை: விண்ணப்பித்தோர் பெற்றுக் கொள்ளலாம்

10.05.2017
ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை பெறுவதற்காக அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது கட்டணச் சலுகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் கட்டணச் சலுகையை பெறலாம்.

இந்நிலையில், இந்த அடையாள அட்டைக்கோரி விண்ணப்பித்த 9 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளி களுக்கு அட்டை தயாராக உள்ளது.

அவற்றை அவர்கள் இதுவரை பெறாததால் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மூத்த மண்டல வர்த்தக மேலாளரை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், காட்பாடி, ஜோலார் பேட்டையில் இந்த அட்டையைக் கோரி விண்ணப்பித்தவர்கள் அங் குள்ள ரயில் நிலைய மேலாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சேவையில் மாற்றம்


திருவாலங்காடு ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 10, 11, 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடம்பத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால் செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த இரு ரயில்களும் நிற்காது.

கூடுதல் பெட்டி இணைப்பு


புதுடெல்லி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (22404), 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பொதுப் பெட்டி ஜூன் 25-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஜூன் 28-ம் தேதி வரையிலும் இப்பெட்டி இணைக்கப்படும்.

No comments:

Post a Comment