FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 10, 2017

மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டண சலுகை பெற அடையாள அட்டை: விண்ணப்பித்தோர் பெற்றுக் கொள்ளலாம்

10.05.2017
ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை பெறுவதற்காக அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது கட்டணச் சலுகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் கட்டணச் சலுகையை பெறலாம்.

இந்நிலையில், இந்த அடையாள அட்டைக்கோரி விண்ணப்பித்த 9 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளி களுக்கு அட்டை தயாராக உள்ளது.

அவற்றை அவர்கள் இதுவரை பெறாததால் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மூத்த மண்டல வர்த்தக மேலாளரை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், காட்பாடி, ஜோலார் பேட்டையில் இந்த அட்டையைக் கோரி விண்ணப்பித்தவர்கள் அங் குள்ள ரயில் நிலைய மேலாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் சேவையில் மாற்றம்


திருவாலங்காடு ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 10, 11, 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடம்பத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால் செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த இரு ரயில்களும் நிற்காது.

கூடுதல் பெட்டி இணைப்பு


புதுடெல்லி-புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (22404), 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பொதுப் பெட்டி ஜூன் 25-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஜூன் 28-ம் தேதி வரையிலும் இப்பெட்டி இணைக்கப்படும்.

No comments:

Post a Comment