FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, May 5, 2017

இந்திய எல்லைக்குள் நுழைந்த வாய் பேச முடியாத, காது கேளாத பாகிஸ்தான் சிறுவன் கைது

05.05.2017
பெரோஸ்பூர்,
பாகிஸ்தான் நாட்டில் அணியப்படும் குர்தா ஆடை மற்றும் அந்நாட்டின் 20 ரூபாய் நோட்டுடன் அந்த சிறுவன் காணப்பட்டுள்ளான்.

பஞ்சாபின் பேரியார் பகுதிக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவன் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான் என தெரிகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பஞ்சாப் போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டு உள்ளான் என கூறியுள்ளார். பஞ்சாபின் பரீத்கோட் பகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கான பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் சிறுவனின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment