FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, July 6, 2017

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூலை 12 முதல் மருத்துவ முகாம்

05.07.2017
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஜூலை 12 முதல் 28 வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரண அளவீட்டு முகாம் ஜூலை 12ல் துவங்கி 28 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஜூலை 12ல் நடக்கிறது.
13ல் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ல் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, 18ல் முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 19ல் போகலுார் அரசு
மேல்நிலைப்பள்ளி, 20ல் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
ஜூலை 21ல் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 25ல் கமுதி கோட்டைமேடு அரசுமேல்நிலைப்பள்ளி, 26ல் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27ல் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 28ல் நயினார்கோயில் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
மாவட்ட மருத்துவ துறை சார்பில் கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அளவெடுக்கும் பணியும் நடக்கிறது.
மேலும் காதுவால் மற்றும் இதர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
அளிக்கப்படும்.
உதடு பிளவு போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையளிக்கப்படும்.
முகாம்களில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment