FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, July 6, 2017

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூலை 12 முதல் மருத்துவ முகாம்

05.07.2017
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஜூலை 12 முதல் 28 வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரண அளவீட்டு முகாம் ஜூலை 12ல் துவங்கி 28 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஜூலை 12ல் நடக்கிறது.
13ல் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ல் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, 18ல் முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 19ல் போகலுார் அரசு
மேல்நிலைப்பள்ளி, 20ல் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
ஜூலை 21ல் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 25ல் கமுதி கோட்டைமேடு அரசுமேல்நிலைப்பள்ளி, 26ல் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27ல் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 28ல் நயினார்கோயில் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
மாவட்ட மருத்துவ துறை சார்பில் கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அளவெடுக்கும் பணியும் நடக்கிறது.
மேலும் காதுவால் மற்றும் இதர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
அளிக்கப்படும்.
உதடு பிளவு போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையளிக்கப்படும்.
முகாம்களில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment