FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, July 6, 2017

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூலை 12 முதல் மருத்துவ முகாம்

05.07.2017
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஜூலை 12 முதல் 28 வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரண அளவீட்டு முகாம் ஜூலை 12ல் துவங்கி 28 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஜூலை 12ல் நடக்கிறது.
13ல் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ல் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, 18ல் முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 19ல் போகலுார் அரசு
மேல்நிலைப்பள்ளி, 20ல் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
ஜூலை 21ல் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 25ல் கமுதி கோட்டைமேடு அரசுமேல்நிலைப்பள்ளி, 26ல் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27ல் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 28ல் நயினார்கோயில் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
மாவட்ட மருத்துவ துறை சார்பில் கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அளவெடுக்கும் பணியும் நடக்கிறது.
மேலும் காதுவால் மற்றும் இதர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
அளிக்கப்படும்.
உதடு பிளவு போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையளிக்கப்படும்.
முகாம்களில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment