FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, July 5, 2017

அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த குழந்தைகளைக் கொஞ்சிய கலெக்டர்!

03.07.2017, ‘திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சைபெற்றோர், அதிநவீன முறையில் கருவிழிமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பயனாளிகள் மற்றும் வாய்பேச முடியாத காது கேளாதோர், "காக்ளியர் இம்பிளாண்ட்" சிகிச்சைபெற்ற குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி சந்தித்தார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.அனிதா, கண் சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர். பார்த்திபன் புருஷோத்தமன், இணைப் பேராசிரியர் டாக்டர். விஜய சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், வெற்றிகரமாக சிகிச்சைகளை எடுத்துப் பயனடைந்த குழந்தைகளிடம் ஆட்சியர் ராசாமணி நலம் விசாரித்தார். “வருங்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்.?" என அந்தக்குழந்தைகளிடம் ஆட்சியர் கேட்க, ஒரு குழந்தை, 'நான் டாக்டராகணும்' என்று சட்டெனச் சொல்லவே, அந்த இடமே குதூகலமானது. வாய்பேச முடியாமல் இருந்து, தற்போது சிகிச்சைக்குப்பின் குரல் வந்துள்ள அக்குழந்தையின் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பார்த்திபன், "இந்தியா முழுவதும் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சதவிகிதம்பேர் கருவிழி நோய் காரணமாக, பார்வை இழப்பு அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையுடன் இணைந்த கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கண் சிகிச்சைத் துறையின் கண் வங்கி உதவியுடன் கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கருவிழி நவீன மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த கண் வங்கியின் மூலம் திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கருவிழி பாதிப்பால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு அதிநவீன கருவிழிமாற்று அறுவைசிகிச்சை மூலம் பார்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். கண்தானம் செய்ய விரும்புவோர் அல்லது இறந்த பின்னர் கண்களை தானம் செய்ய விரும்பும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251465 மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க அலுவலக எண்: 0431-2770040 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என்றார்.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான துறைத் தலைவர் டாக்டர் பழனியப்பன், "திருச்சி மாவட்டத்தில் பிறவியிலேயே காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 'காக்ளியர் இம்பிளாண்ட்' ஆபரேஷன் மூலம் காது கேட்கவும், பேச வைக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2016 நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த அறுவைசிகிச்சையின் மூலம் மணப்பாறையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி புவனேஸ்வரி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகிய மூன்று குழந்தைகள், தற்போது காதுகேட்கும் திறன் பெற்றுள்ளனர். மேலும், பேச்சுப்பயிற்சியின் மூலம் பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.


இந்தச் சிகிச்சைமுறை குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 37 குழந்தைகளுக்கு 'காக்ளியர் இம்பிளாண்ட்' அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பிறவிக்குறைபாடு நீக்கப்பட்டு, சாதாரண குழந்தைகளாக மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன அறுவைசிகிச்சை ஒரு வயது முதல் ஆறு வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செய்யப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆகும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. அண்மையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 10 குழந்தைகளுக்கு 'காக்ளியர் இம்பிளாண்ட்' கருவி பொருத்தப்பட்டது" என்றார்.

மருத்துவத்துறையில் சிறந்துவிளங்கும் மூன்று மருத்துவர்களுக்கான விருதுகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கிப் பேசினார்.

“தமிழகத்தில் கடைநிலை மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்கும்வகையில் அரசு தீவிர அக்கறை செலுத்தி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திருச்சியை ஆரோக்கியமான முன்மாதிரி மாவட்டமாக உயர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகளுக்குப் பின் தங்கள் குழந்தைகள் காதுகேட்டுப் பேசுவதைக் கண்ட அவர்களின் பெற்றோர், மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கலெக்டர், மருத்துவமனை டீன் டாக்டர் அனிதா மற்றும் அனைத்து டாக்டர்களுக்கும் குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment