FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, July 12, 2017

வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளி கலெக்டர் முன் தீக்குளிக்க முயற்சி


11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment