FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, July 12, 2017

வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளி கலெக்டர் முன் தீக்குளிக்க முயற்சி


11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment