FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, July 12, 2017

வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளி கலெக்டர் முன் தீக்குளிக்க முயற்சி


11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment