FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, July 12, 2017

வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளி கலெக்டர் முன் தீக்குளிக்க முயற்சி


11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment