FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 14, 2017

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை வாக்காளர்களாகச் சேர்த்த குமரி கலெக்டர்!

14.07.2017
கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நாகர்கோவிலில் உள்ள ஓரல் காது கேளாதோர் பள்ளியில், ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் துவக்கிவைத்தார். அப்போது, அவர் பேசும் போது, "இந்தியத் தேர்தல் ஆணையம், 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட புதிய இளம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சிறப்புப் பணி, 2017 ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறன்கொண்ட மாணவ மாணவியர்களுக்கிடையே வாக்களிப்பதன் அவசியம்குறித்தும், ஜனநாயகக் கடமைகள்குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின்மூலம் நாகர்கோவில், ஓரல் காதுகேளாதோர் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்..

இந்த சிறப்பு முகாமில், 18 வயது பூர்த்தியான மாற்றுத்திறன் கொண்ட 35 மாணவ மாணவிகளிடமிருந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டன. மேலும், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, வருகிற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதிசெய்திட, மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள், கல்வி கற்பதை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, கலெக்டர் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment