FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, July 14, 2017

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை வாக்காளர்களாகச் சேர்த்த குமரி கலெக்டர்!

14.07.2017
கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நாகர்கோவிலில் உள்ள ஓரல் காது கேளாதோர் பள்ளியில், ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் துவக்கிவைத்தார். அப்போது, அவர் பேசும் போது, "இந்தியத் தேர்தல் ஆணையம், 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட புதிய இளம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சிறப்புப் பணி, 2017 ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறன்கொண்ட மாணவ மாணவியர்களுக்கிடையே வாக்களிப்பதன் அவசியம்குறித்தும், ஜனநாயகக் கடமைகள்குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின்மூலம் நாகர்கோவில், ஓரல் காதுகேளாதோர் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்..

இந்த சிறப்பு முகாமில், 18 வயது பூர்த்தியான மாற்றுத்திறன் கொண்ட 35 மாணவ மாணவிகளிடமிருந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டன. மேலும், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, வருகிற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதிசெய்திட, மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள், கல்வி கற்பதை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, கலெக்டர் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment