FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, July 6, 2017

இலவச தையல் மிஷின் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

05.07.2017
சமூக நலத்துறை வழங்கும் இலவச தையல் மெஷின் பெற விரும்பும் பயனாளிகள், வரும், 11ம் தேதிக்குள், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை மூலம், சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிடச்சசான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சசான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.--------சிமென்ட், கம்பி வினியோகம்அறிக்கை அளிக்க உத்தரவு -நமது நிருபர் -ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை வீடுகள், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில், கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. பயனாளிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி உள்ளிட்டவை, மானியத்தில் வழங்கப்படுகிறது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது.பயனாளிகள் உரிய நேரத்தில் கட்டுமான பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மட்டும், சிமென்ட் மற்றும் கம்பிகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பயனாளிகள் வசதிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிமென்ட், கம்பிகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கீடு படிவத்துடன் வந்தால், அவர்களுக்கான கம்பி, சிமென்ட் எடுத்துச் செல்லலாம். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து, வாராந்திர அறிக்கையை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment