FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, July 6, 2017

இலவச தையல் மிஷின் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

05.07.2017
சமூக நலத்துறை வழங்கும் இலவச தையல் மெஷின் பெற விரும்பும் பயனாளிகள், வரும், 11ம் தேதிக்குள், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை மூலம், சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிடச்சசான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சசான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.--------சிமென்ட், கம்பி வினியோகம்அறிக்கை அளிக்க உத்தரவு -நமது நிருபர் -ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை வீடுகள், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில், கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. பயனாளிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி உள்ளிட்டவை, மானியத்தில் வழங்கப்படுகிறது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது.பயனாளிகள் உரிய நேரத்தில் கட்டுமான பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மட்டும், சிமென்ட் மற்றும் கம்பிகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பயனாளிகள் வசதிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிமென்ட், கம்பிகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கீடு படிவத்துடன் வந்தால், அவர்களுக்கான கம்பி, சிமென்ட் எடுத்துச் செல்லலாம். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து, வாராந்திர அறிக்கையை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment