FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, July 6, 2017

இலவச தையல் மிஷின் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

05.07.2017
சமூக நலத்துறை வழங்கும் இலவச தையல் மெஷின் பெற விரும்பும் பயனாளிகள், வரும், 11ம் தேதிக்குள், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை மூலம், சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிடச்சசான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சசான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.--------சிமென்ட், கம்பி வினியோகம்அறிக்கை அளிக்க உத்தரவு -நமது நிருபர் -ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை வீடுகள், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில், கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. பயனாளிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி உள்ளிட்டவை, மானியத்தில் வழங்கப்படுகிறது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது.பயனாளிகள் உரிய நேரத்தில் கட்டுமான பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மட்டும், சிமென்ட் மற்றும் கம்பிகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பயனாளிகள் வசதிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிமென்ட், கம்பிகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கீடு படிவத்துடன் வந்தால், அவர்களுக்கான கம்பி, சிமென்ட் எடுத்துச் செல்லலாம். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து, வாராந்திர அறிக்கையை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment