FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, July 6, 2017

இலவச தையல் மிஷின் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

05.07.2017
சமூக நலத்துறை வழங்கும் இலவச தையல் மெஷின் பெற விரும்பும் பயனாளிகள், வரும், 11ம் தேதிக்குள், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை மூலம், சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிடச்சசான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சசான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.--------சிமென்ட், கம்பி வினியோகம்அறிக்கை அளிக்க உத்தரவு -நமது நிருபர் -ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை வீடுகள், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில், கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. பயனாளிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி உள்ளிட்டவை, மானியத்தில் வழங்கப்படுகிறது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது.பயனாளிகள் உரிய நேரத்தில் கட்டுமான பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மட்டும், சிமென்ட் மற்றும் கம்பிகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பயனாளிகள் வசதிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிமென்ட், கம்பிகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கீடு படிவத்துடன் வந்தால், அவர்களுக்கான கம்பி, சிமென்ட் எடுத்துச் செல்லலாம். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து, வாராந்திர அறிக்கையை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment