FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 14, 2017

சிறையில் கணவர்... வாய் பேச முடியாத, காது கேட்காத கர்ப்பிணி பெண்..! கதிராமங்கலம் சோகம்

14.07.2017
பாசப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, கறுப்புக்கொடி போராட்டம் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது கதிராமங்கலம். இது ஒருபுறமிருக்க, கடந்த 30-ம் தேதி இங்கு நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறையின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர், மனக்குமுறலோடு பாசப்போராட்டத்தில் தவித்துவருகிறார்கள். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், ஜெயராமன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சுடர், ரமேஷ், சிலம்பரசன், முருகன், வெங்கட்ராமன், தர்மராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் தவித்துவருகின்றன. இவர்களில், ரமேஷின் குடும்பச் சூழல் மிகவும் பரிதாபமாக உள்ளது. கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில் வறுமையோடு தோற்றமளிக்கிறது ரமேஷின் சின்னஞ்சிறு ஓட்டு வீடு. கூலித் தொழிலாளியான ரமேஷூக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத நிறைமாத கர்ப்பிணியான கவிதா, தனது மனக்குமுறலை வார்த்தைகளால் கொட்ட முடியாத நிலையில் கண்ணீரைக் கொட்டித் தீர்க்கிறார். கணவர் ரமேஷ் சிறை சென்றதிலிருந்து சரியாக உணவருந்தாமல், தூக்கமில்லாமல் கவிதாவின் உடல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக கவலைதெரிவிக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள். ''கவிதாவின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பாவார்கள். அப்படி ஏதேனும் நடந்தால், ஒட்டுமொத்த கதிராமங்கலமும் கிளர்ந்தெழும்'' என எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறையில் வாடும் சிலம்பரசனின் குடும்பம், தற்போது அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டட கூலித் தொழிலாளியான சிலம்பரசனின் சொற்ப வருமானத்தில்தான் அன்றாட வாழ்க்கை கடந்திருக்கிறது. சிறையிலிருக்கும் மற்றொரு நபரான முருகனை, சிறையில் சென்று சந்திக்க மன தைரியம் இல்லாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் பெரும் ஆற்றாமையோடு தவித்துவருகிறார் இவரது மனைவி. காரணம், இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையிடம் முருகனுக்கு பாசம் அதிகம். 10 நாள்களுக்கும் மேலாக அப்பாவைப் பார்க்காமல் ஏக்கத்தில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. கணவரைப் பார்க்க, சிறைச்சாலைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவும் மனமில்லை. தனியாகப் போய்ப் பார்க்க மனம் இல்லை. இப்படியாக, கண்ணீரோடு கடந்துகொண்டிருக்கிறது, இவர்களின் அன்றாடப் பொழுதுகள்.

No comments:

Post a Comment