FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 14, 2017

சிறையில் கணவர்... வாய் பேச முடியாத, காது கேட்காத கர்ப்பிணி பெண்..! கதிராமங்கலம் சோகம்

14.07.2017
பாசப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, கறுப்புக்கொடி போராட்டம் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது கதிராமங்கலம். இது ஒருபுறமிருக்க, கடந்த 30-ம் தேதி இங்கு நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறையின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர், மனக்குமுறலோடு பாசப்போராட்டத்தில் தவித்துவருகிறார்கள். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், ஜெயராமன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சுடர், ரமேஷ், சிலம்பரசன், முருகன், வெங்கட்ராமன், தர்மராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் தவித்துவருகின்றன. இவர்களில், ரமேஷின் குடும்பச் சூழல் மிகவும் பரிதாபமாக உள்ளது. கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில் வறுமையோடு தோற்றமளிக்கிறது ரமேஷின் சின்னஞ்சிறு ஓட்டு வீடு. கூலித் தொழிலாளியான ரமேஷூக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத நிறைமாத கர்ப்பிணியான கவிதா, தனது மனக்குமுறலை வார்த்தைகளால் கொட்ட முடியாத நிலையில் கண்ணீரைக் கொட்டித் தீர்க்கிறார். கணவர் ரமேஷ் சிறை சென்றதிலிருந்து சரியாக உணவருந்தாமல், தூக்கமில்லாமல் கவிதாவின் உடல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக கவலைதெரிவிக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள். ''கவிதாவின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பாவார்கள். அப்படி ஏதேனும் நடந்தால், ஒட்டுமொத்த கதிராமங்கலமும் கிளர்ந்தெழும்'' என எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறையில் வாடும் சிலம்பரசனின் குடும்பம், தற்போது அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டட கூலித் தொழிலாளியான சிலம்பரசனின் சொற்ப வருமானத்தில்தான் அன்றாட வாழ்க்கை கடந்திருக்கிறது. சிறையிலிருக்கும் மற்றொரு நபரான முருகனை, சிறையில் சென்று சந்திக்க மன தைரியம் இல்லாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் பெரும் ஆற்றாமையோடு தவித்துவருகிறார் இவரது மனைவி. காரணம், இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையிடம் முருகனுக்கு பாசம் அதிகம். 10 நாள்களுக்கும் மேலாக அப்பாவைப் பார்க்காமல் ஏக்கத்தில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. கணவரைப் பார்க்க, சிறைச்சாலைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவும் மனமில்லை. தனியாகப் போய்ப் பார்க்க மனம் இல்லை. இப்படியாக, கண்ணீரோடு கடந்துகொண்டிருக்கிறது, இவர்களின் அன்றாடப் பொழுதுகள்.

No comments:

Post a Comment