FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, July 14, 2017

சிறையில் கணவர்... வாய் பேச முடியாத, காது கேட்காத கர்ப்பிணி பெண்..! கதிராமங்கலம் சோகம்

14.07.2017
பாசப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, கறுப்புக்கொடி போராட்டம் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது கதிராமங்கலம். இது ஒருபுறமிருக்க, கடந்த 30-ம் தேதி இங்கு நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறையின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர், மனக்குமுறலோடு பாசப்போராட்டத்தில் தவித்துவருகிறார்கள். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், ஜெயராமன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சுடர், ரமேஷ், சிலம்பரசன், முருகன், வெங்கட்ராமன், தர்மராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் தவித்துவருகின்றன. இவர்களில், ரமேஷின் குடும்பச் சூழல் மிகவும் பரிதாபமாக உள்ளது. கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில் வறுமையோடு தோற்றமளிக்கிறது ரமேஷின் சின்னஞ்சிறு ஓட்டு வீடு. கூலித் தொழிலாளியான ரமேஷூக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத நிறைமாத கர்ப்பிணியான கவிதா, தனது மனக்குமுறலை வார்த்தைகளால் கொட்ட முடியாத நிலையில் கண்ணீரைக் கொட்டித் தீர்க்கிறார். கணவர் ரமேஷ் சிறை சென்றதிலிருந்து சரியாக உணவருந்தாமல், தூக்கமில்லாமல் கவிதாவின் உடல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக கவலைதெரிவிக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள். ''கவிதாவின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பாவார்கள். அப்படி ஏதேனும் நடந்தால், ஒட்டுமொத்த கதிராமங்கலமும் கிளர்ந்தெழும்'' என எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறையில் வாடும் சிலம்பரசனின் குடும்பம், தற்போது அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டட கூலித் தொழிலாளியான சிலம்பரசனின் சொற்ப வருமானத்தில்தான் அன்றாட வாழ்க்கை கடந்திருக்கிறது. சிறையிலிருக்கும் மற்றொரு நபரான முருகனை, சிறையில் சென்று சந்திக்க மன தைரியம் இல்லாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் பெரும் ஆற்றாமையோடு தவித்துவருகிறார் இவரது மனைவி. காரணம், இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையிடம் முருகனுக்கு பாசம் அதிகம். 10 நாள்களுக்கும் மேலாக அப்பாவைப் பார்க்காமல் ஏக்கத்தில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. கணவரைப் பார்க்க, சிறைச்சாலைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவும் மனமில்லை. தனியாகப் போய்ப் பார்க்க மனம் இல்லை. இப்படியாக, கண்ணீரோடு கடந்துகொண்டிருக்கிறது, இவர்களின் அன்றாடப் பொழுதுகள்.

No comments:

Post a Comment